Monday, 13 June 2011

கூற்றுக் கோட்பாட்டு நோக்கில் திருக்குறள்



கே. பழனிவேலு

              கீழ்க்கணக்கு நூல்கள் பொதுவா கச் சங்க காலத்திற்குப்பிற்பட்டவை என ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. அவற்றில் திணைக் கோட்பாட்டை ஓரளவுக்கு நம்மால் காணமுடிகிறது. என்றாலும் திணைக் கவிதை மரபிலிருந்து அவை மாறுபட்டே காணப்படுகின்றன. கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படும் திருக்குறளின் காலத்தைச் சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டதாகக்காணும் போக்கும் நம்மிடையே காணப்படுகிறது. அதற்குக் காரணம் திருக்குறளை தமிழ் இனத்தின் அடையாளமாகக் கட்டமைக்கின்ற இன அரசியலும் அறமுரைத்தலை மீறிக் குறளில் வெளிப்படுகின்ற கவிதைத் தன்மையுமே ஆகும். திணைக் கவிதைகளுடைய மரபை யட்டிக் குறளின் கவிதைத் தன்மை அமைந்திருப்பதனாலும் தொன்மையே பெருமை என்ற தவறான நம்பிக்கையாலும் சங்கக்கவிதைகளுக்கு முற்பட்டதாகத் திருக்குறளைப் பார்க்கும் பார்வை உருவானது. ஆனாலும் குறள் அதன் கவித்துவச் சிறப்புக்காகக் கொண்டாடப்படுகிறதா? என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்ற பதிலே கிடைக்கிறது. திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களான
முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவர், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப் பயன், பொருளுரை, முதுமொழி என்பவற்றுள் ஆசிரியர் பெயரை நூலுக்கு உணர்த்துகின்ற திருவள்ளுவர் என்பதும் அவரால் அளிக்கப்பட்டது எனும் திருவள்ளுவப் பயன் என்பதும் தவிர்த்த பிறஅனைத்தும் குறள் அறநூலாகவே பார்க்கப்பட்டும் பயிலப்பட்டும் வந்தமையைக் காட்டுகின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற மேன்மையான வாழ்வியல் அறங்களின் தொகுதியே திருக்குறள் எனும் கருத்து எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. என்றாலும், குறளின் இலக்கியத்
தன்மை தொடர்ந்து சுட்டப்பட்டுக் கொண்டே வருகின்றது. இலக்கை
உடையது இலக்கியம் என நாம் பேசிக்கொண்டு வந்தாலும் இலக்கியம்
கட்டற்றது; பன்முகமாக விரியக் கூடியது; வாசகனின் அனுபவத்திற்
கேற்பப் பல்வேறு வகையான பொருள்தரும் சாத்தியமுடையது
திணைக் கவிதைகளுடைய
மரபை யட்டிக் குறளின்
கவிதைத் தன்மை
அமைந்திருப்பதனாலும்
தொன்மையே பெருமை
என்ற தவறான
நம்பிக்கையாலும் சங்கக்
கவிதைகளுக்கு
முற்பட்டதாகத்
திருக்குறளைப் பார்க்கும்
பார்வை உருவானதுபுதிய பனுவல்  28
என்பதை நவீனத் திறனாய்வுப் பார்வைகள் உணர்த்துகின்றன. அவை,
ஒரு நல்ல இலக்கியப் பனுவல் தமக்குள்ளே நுழையும் ஒவ்வொருவரும்
தமக்கான பொருளைத் தேடிக் கண்டடைந்து கொள்ளத்தக்கதாக
இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றன.
இலக்கியப் பனுவல் பற்றிய நவீனத் திறனாய்வுப் பார்வைகள்
அறத்திற்கு, அறச்சொல்லாடலுக்கு எதிரிடையானவையாகும்.
திருக்குறளின் கவிதை மதிப்பைக் காணும்போது அதன் கவிதை மொழி
அறமுரைக்கும் வட்டத்திற்குள் குறுகிவிட மறுப்பதைக் காணலாம்.
அதனை உணர்ந்து கொண்ட க.த. திருநாவுக்கரசு,
நீதி இலக்கியம் என்ற முறையில் நோக்குகின்ற பொழுது, அதில்
‘மற்றொன்று விரித்தல்’ மிகுதியாக இடம் பெற்றுள்ளதைக்
காணுகின்றோம் . வழக்காற்று ஒழுக்க நெறியை அது
விளக்குகின்றது. இக்காரணங்களால், கவிதைச் சுவையும்
கற்பனை வளமும் அதில் குறிப்பிடத்தக்க அளவிற்குக்
காணப்பெறுகின்றன. (1997: 360)
என்று கூறுகின்றார். அவர் திருக்குறளின் கவிதை மதிப்பு பற்றிச்
சுட்டினாலும் அதனை ஒரு குற்றமாகவே கருதுகிறார். என்பதை அவர்
பயன்படுத்தும் ‘மற்றொன்று விரித்தல்’ என்ற தொடர் நமக்குத்
தருகிறது. பொதுவாகக் கீழ்க்கணக்கு நூல்களின் நீதி, அற மதிப்பை
மட்டுமே கவனத்தில் கொண்டுள்ள தமிழுலகம் ,அவற்றின் சமூக,
அரசியல் பின்னணிகளையே மிகுதியும் ஆராய்ந்து வருகிறது. இக்
கட்டுரை திருக்குறளின் கவிதை மதிப்பைக் கவனத்தில் கொள்வதனால்
அது பயன்படுத்தும் மொழியின் பொருள் விரிவைக் கூற்றுக்
கோட்பாட்டின்  (ஜிலீ மீ ஷீக்ஷீஹ் ஷீயீ ஹி ttமீ க்ஷீணீஸீநீமீ ) அடிப்படையில் விளக்க
முயல்கிறது.
மொழியின் வெளிப்பாடுகூட தனிமனிதன் சார்ந்ததல்ல என்று
கூறும் பக்தின், கவிதையைவிட உரைநடை வடிவமே மொழியின்
பல்வேறு தளங்களையும், சாத்தியப்பாடுகளையும் தொடுவதாக
இருக்கிறது என்று கூறுகின்றார். உரைநடையிலும் நாவல் இலக்கிய
வகைமையே பிற வகைமைகளைவிடச் சிறப்பானது என்று
கருதுகின்றார். தமது கட்டுரை ஒன்றில் நாவலையும் காப்பியத்தையும்
ஒப்பிடும் பக்தின், காப்பியத்தை வாசக அனுபவத்திற்கு இடம் தராத,
‘மூடுண்ட இலக்கிய வடிவம்’ என்கிறார். அவருடைய பார்வையில்
செவ்வியல் இலக்கிய வடிவங்கள் அனைத்தும் புதிய  திறப்புகளுக்கு
இடம் தராத, ‘முடிந்து போன’ இலக்கிய வடிவங்களாகும். (1981: 3-10)
செவ்வியல் இலக்கிய வகையைச் சார்ந்த திருக்குறளைப்
பக்தினுடைய கருத்தின் பின்னணியில் திறனாய்வது ஒரு வகையில்
முரண்பாடாகத் தோன்றலாம். கூற்றுக் கோட்பாடு அடிப்படையில்
கே. பழனிவேலு
அவர் திருக்குறளின்
கவிதை மதிப்பு பற்றிச்
சுட்டினாலும் அதனை ஒரு
குற்றமாகவே கருதுகிறார்புதிய பனுவல்  29
மொழியின் பொது இயல்பு சார்ந்தது என்பதனால் அந்தக்
கோட்பாட்டைப் பக்தின் உரைநடை இலக்கியங்களில் (நாவல்களில்)
பொருத்தி ஆராய்ந்துள்ளார். கூற்று பற்றிய கருத்தைக் கவிதையில்
பொருத்துவதன் மூலம், இலக்கிய ஆய்வுப் பரப்பு முழுவதிற்கும்
நீட்டலாம் என்பதனால், கவிதையாக்கத்திற்குக் குறைந்த அளவிலான
மொழியைப் பயன்படுத்தியுள்ள திருக்குறளில் அம்முயற்சி இங்கே
மேற்கொள்ளப்படுகிறது.
இலக்கியத்தை, குறிப்பாகக் கவிதையை ஒரு மொழி விளையாட்டு
என்பர். இலக்கியமாகும் சந்தர்ப்பத்தில் மொழி தனது அடிப்படைப்
பண்பான தகவல் பரிமாற்றம் செய்தல் என்பதற்கும்மேல் செயல்படத்
தொடங்கிவிடுகிறது. அப்போது மொழி ஒரு புனைவாக, பல்வேறு
பொருண்மைகளைத் தரும் சொல்லிணைவுகளின் தொகுதியாக
மாறிப்போகிறது. இங்கும் மொழி வழியிலான தகவல் தொடர்பே
நடக்கிறது; சொல்பவர் கேட்பவர்; எழுத்தாளர் வாசிப்பவர் என்ற
முனைகள் இருக்கின்றன. ஆனால், இந்த முனைகளுக்குள் தொழிற்படு
கின்ற மொழி-/புனைவு எடுத்துரைப்பு (ழிணீக்ஷீக்ஷீணீtவீஸ்மீ ) சார்ந்தது. ஒரு கூற்று
உருவாக்கப்படும் சூழலும் (சிஷீஸீtமீ ஜ்t) அது பிற கூற்றுகளுடன் தொடர்பு
கொள்வதால் பெறுகின்ற பொருள் விரிவும் முக்கியமானவையாகும்.
அதே நேரத்தில் கூற்று தன்னியல்பில் சேமித்து வைத்துக்கொண்டுள்ள
பல்வேறு பொருண்மைச் சூழல்களும் கவனம் கொள்ளத்தக்கவை
ஆகின்றன. இத்தகைய கூற்று பற்றிய கருத்துக்களைப் பக்தின் தனது
இலக்கியத் திறனாய்வுகளில் விரிவாக வெளிப்படுத்துகின்றார்.
மொழியானது விதிகளின் தொகுப்பாக இயங்குகிறது என்ற
அணுகுமுறையிலிருந்து பக்தின் மாறுபட்டவர். மொழியைப் படைப்புக்
கூறுகளைக் கொண்ட சாதனமாக அவர் பார்த்தார். இதனால் மொழி
பேசப்படும் காலம், சூழல் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள
வேண்டும் என்றார். காலம், சூழல் ஆகியவையே பேச்சுகளின்
பொருண்மையை முடிவு செய்கின்றன. பேசுபவர், கேட்பவர், பேச்சு
நிகழ்கின்ற காலம், இடம் ஆகியவை இல்லாமல், சொல்லும் தொடரும்
பொருண்மை பெறமுடியாது என்றும் கூறினார். அகராதிப் பொருளை
விடச் சூழல் பொருளே முக்கியமானது என்னும் கருத்துகளின்
அடிப்படையில் உருவானதே கூற்றுக் கோட்பாடு. (2001, 231).
வழக்கத்தில் உள்ள கூற்றுகளால் உருவாக்கப்படும் இலக்கியப்
பனுவல் சமூகத்தையும் வரலாற்றையும் தமக்குள் கொண்டிருப்பதுடன்
கூற்றுக்கான பல்வேறு எதிர் கூற்றுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
பக்தின் சுட்டும் மொழியின் உரையாடல் தன்மை என்பது, “பேசுபவர்
மற்றும் கேட்பவரின் எண்ணக் கலவையாகவும் முந்தைய கூற்றிலிருந்து
பொருளை உருவாக்குவதாகவும் தங்களைச் சரியான இடத்தில் நிலை
நிறுத்துவதற்கான அடிப்படைத் தேவையாகவும் இருக்கிறது’’ என்பர்.
(1997: 45-46) மேலும், பக்தின் உரையாடல் தன்மை என்பதை,
கே. பழனிவேலு
பேசுபவர், கேட்பவர்,
பேச்சு நிகழ்கின்ற காலம்,
இடம் ஆகியவை
இல்லாமல், சொல்லும்
தொடரும் பொருண்மை
பெறமுடியாது என்றும்
கூறினார்புதிய பனுவல்  30
”முதலாவதாகக் கூற்றுகளுக்கும் நடைகளுக்கும் இடையே உள்ள
தொடர்பைக் குறிக்கப் பயன்படுத்துகின்றார். இரண்டாவதாக
எண்ணங்களுக்கு இடையே உள்ள தொடர்பாகக் கருதுகின்றார்.
மூன்றாவதாக ஒரு தொடரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
சூழல்களின் ஊடுறுவலாகக் கொள்ளலாம் என்கின்றார். இதில்
சமுதாய, வரலாற்றுச் சூழல்கள் சங்கமமாகின்றன’’ என்பர் (1997: 45-
46 ) கூற்றுகள் மட்டுமின்றி மௌனங் களும் பனுவல்களில்
பொருளுடையவையாக இருக்கின்றன. இதை விவரிக்கும் பக்தின்,
எந்த ஒரு கூற்றாக இருந்தாலும் (தினந்தோறும் நிகழும்
உரையாடல்களில் உள்ள ஓரிரு வார்த்தைகளினாலான சிறிய
எதிர் உரையாடலாகவோ, பெரிய புதினமாகவோ அல்லது
அறிவியல் ஆய்வுரையாகவோ இருந்தாலும்) அதற்கு ஒரு
முழுமையான தொடக்கமும் ஒரு முழுமை¬யான முடிவும்
இருக்கும். கூற்றுகளின் தொடக்கத்திற்குப் பிறருடைய
எதிர்வினைக் கூற்றுகளும் இருக்கும். இவ்வெதிர்க் கூற்று ஒரு
மௌனமாகவோ, புரிந்துகொண்டதன் வெளிப்பாடாக
அமையும் வினையாகவோ இருக்கும். (1994: 82)
என்கிறார். பக்தினின் கருத்துப்படி கூற்று என்பது தனித்து நிற்கக்
கூடியது அன்று. அது முன்னால் சென்ற கூற்றோடும், பின்னால் வரும்
கூற்றுகளோடும் தொடர்புடையது. மேலும் மௌனங்களும்
எதிர்வினைகளும்கூட கூற்றுகளே ஆகும்.
குறைவான சொற்களைக் கையாண்டு கவிதையை உருவாக்கியுள்ள
திருக்குறளை, பக்தின் சுட்டும் கூற்று பற்றிய இக்கருத்துகளின்
அடிப்படையில் ஆராய்ந்து கவிதை கொள்ளும் பொருண்மை
விரிவுகளைக் காணமுடியும்.
பொதுவாக ஓர் இலக்கியம் என்பது மொழியைக் கையாளும்
படைப்பாளியின் நுட்பமான செயல்திறனால் உருவாகின்றது எனலாம்.
கவிதையின்மொழி, பிற இலக்கிய வடிவங்களின் மொழியிலிருந்து
வேறுபட்டுப் பொருள் செறிவு உடையதாக, மேலோட்டமான வாசிப்
பிற்கு  அகப்படாததாக அமைந்திருக்கிறது. நுட்பமான வாசிப்
பினாலும் நுண்மையான பொருள்கோளினாலுமே கவிதைப் பொருள்
விளங்குவதாக அமைந்திருக்கிறது. இதனால் கவிதையின் மொழி
உணர்வுகளால் அமைந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அறமொழி
என்பது உணர்வுகளுக்கு எதிரிடையானது- : வெளிப்படையான
தன்மையைக் கோருவது: ஒரே பொருண்மையை மட்டும் முன்வைப்பது,
கவிதை ஒரு கலை என்றால் அறம் ஓர் அறிவியல் ஆகும்.
சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப் பற்றி
ஆராயும் ஒருவகை விஞ்ஞானமாக மேல்வரம்பிட்ட விஞ்ஞான
கே. பழனிவேலு
நுட்பமான வாசிப்
பினாலும் நுண்மையான
பொருள்கோளினாலுமே
கவிதைப் பொருள்
விளங்குவதாக
அமைந்திருக்கிறது.
இதனால் கவிதையின்
மொழி உணர்வுகளால்
அமைந்ததாகக்
கருதப்படுகிறதுபுதிய பனுவல்  31
மாக  (ழிஷீக்ஷீனீ ணீtவீஸ்மீ ஷிநீவீமீ ஸீநீமீ ) அறவியலை நாம் வரையறுக்கலாம்.
ஒரு மனிதனின் நடத்தை சரியானதென்றோ, தவறானதென்றோ,
நன்மை பயக்குமென்றோ, தீமை பயக்குமென்றோ கூறுவதும்
இது போன்று முடிவு கட்டுவது அல்லது தீர்மானிப்பதும் இந்த
விஞ்ஞான வகையினில் அடங்கும் (1968-: 2)
என்று கூறுவர்.
மனிதனின் நடத்தை சார்ந்து நன்மை தீமைகள்; சரி தவறுகள்
முதலியவற்றை வரையறுக்கின்ற சொல்லாடல் வெளிப்படையாக,
மயக்கமற்று இருப்பது அவசியமாகும். அடிப்படையில் நல்ல என்ற
சொல் பொருண்மை மயக்கத்தைத் தரக் கூடியது. நல்ல பையன், நல்ல
சகுணம், நல்ல குணம், நல்ல காற்று, நல்ல சமயம், நல்ல வெய்யில்’’
என்ற சொல்லிணைவுகளில் நல்ல என்ற சொல்லின் பொருண்மை
வெவ்வேறாக அமைந்திருக்கின்றது. அதனால்தான் அறவியல்
இச்சொல்லை மிக்க ‘இடைஞ்சல் தரும் சொல்லாகக்’ கருதுகின்றது.
சூழல் சார்ந்தே சொற்கள் பொருள் கொள்ளுகின்றன. அறத்தின்
மொழியைப் பற்றி ஆராயும் அறவியலாளர்கள்,
1 . கட்டளை மொழி, 2. மன எழுச்சி வகை அல்லது
உணர்ச்சியைக் குறிக்கும் மொழி, 3. விரித்துரைக்கும் மொழி,
4. வினாவுகிற மொ ழி என வகைப்படுத்துகின்றனர்.
கட்டளையைக் குறிக்கும் வாக்கியத்தில் ஏவவிடும் வினைச்
சொல்லும் மன எழுச்சியைக் குறிக்கும் வாக்கியத்தில் வியப்பை
உணர்த்தும் சொல்லும், விரித்துரைக்கும் வாக்கியத்தில்
தெரிநிலை வினைச் சொல்லும், வினாவுகிற முறையில் அமையும்
வாக்கியத்தில் தன்மை போன்ற இடவகையை உணர்த்தும்
பெயர்ச் சொல்லும், உரிச்சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்
பதைக் காணலாம். (1986: 454)
என அறவியல் சுட்டுகிறது. அறத்தைத் தத்துவார்த்தமாக உணர்த்தும்
கலைச்சொற்கள் பல இருந்தாலும் நடைமுறையில் அறத்தை
உணர்த்தும் சொற்கள் பொதுமொழி சார்ந்தனவே ஆகும். அறத்தை
உரைக்கும் பொதுமொழி இலக்கிய வடிவம் கொள்ளும்போது
இலக்கியத்திற்கான அமைப்பைப் பெறாமல் இருக்க முடியாது.
அற இலக்கியங்கள் நன்மை தீமை; சரி தவறு; பின்பற்ற வேண்டியது
தவிர்க்கவேண்டியது என்ற எதிர்மைகளைச் சமூகம் சார்ந்து
முன்வைக்கின்றன. இவ்வகையான இரட்டைகள் காலம் கடந்து
நிற்பவைகளாக, மாறாத தன்மை உடையவையாகக் காட்டப்படு
கின்றன. அறத்தைப் பின்பற்றினால் கிடைக்கக்கூடிய நன்மைகளும்
தவறுவதனால் வரக்கூடிய தீமைகளும்தான் அறச் சொல்லாடல்களின்
அடிப்படைகளாகும். இத்தகைய சொல்லாடல்கள் பொருள் விரிவு
இன்றித் தட்டையாக அமைபவை என்பதனால் அறப்பனுவல்கள்
கே. பழனிவேலு
நல்ல பையன், நல்ல
சகுணம், நல்ல குணம்,
நல்ல காற்று, நல்ல சமயம்,
நல்ல வெய்யில்’’ என்ற
சொல்லிணைவுகளில்
நல்ல என்ற சொல்லின்
பொருண்மை வெவ்வேறாக
அமைந்திருக்கின்றது.
அதனால்தான் அறவியல்
இச்சொல்லை மிக்க
‘இடைஞ்சல் தரும்
சொல்லாகக்’
கருதுகின்றதுபுதிய பனுவல்  32
ஒற்றைக் குரல் பனுவல்களாகப் (விஷீஸீஷீறீஷீரீவீநீ ஜிமீ ஜ்t) பார்க்கப்படுகின்றன.
அறத்தைச் சுட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதனால் திருக்குறள்
எதிர் எதிர்க் கூற்றுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி அறம் சார்ந்த இரட்டைகளை உருவாக்கும் வள்ளுவர்,
அவற்றைப் பலவிதமான அமைப்புகளில் கவிதையாக்குகின்றார்.
உடன்பாடு  ஜ்  எதிர்மை ஆகிய இரண்டையும் ஒரே பாடலில்
கொண்டுவருகின்ற தன்மையையும் காணலாம்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும். (12)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி. (131)
சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (200)
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (430)
பெரும்பாலும் இவ்வகையான எதிர்க்கூற்றுகளில் ஒன்று வெளிப்படை
யான கூற்றாகவும் மற்றது வெளிப்படாத கூற்றாகவும் குறளில்
அமைந்திருக்கின்றது. சொல்லாமல் விடப்பட்ட கூற்றை வாசகன்
பனுவலுக்குள் நுழைந்து தேடத் தொடங்குகிறான். அதனால் பனுவல்
நேரடியாகச் சுட்டாத போதும் பனுவலுக்குள் மறைந்திருக்கும் கூற்று
வாசகனை வெவ்வேறு தளங்களுக்குச் செல்லத் தூண்டுவதாக
அமைகிறது. திருக்குறள் ஒரு கூற்றை முன்வைத்து மறு கூற்றை
வாசகனிடம் உருவாக்க முனையும் அதே வேளையில் எதிர்
கூற்றுகளையும் சில கவிதைகளில் முன்வைத்துவிடுகிறது. அத்தகு
கவிதைகளில் பனுவலைக் கடந்து செல்ல இயலாமல் போகிறது.
வெளிப்பட்டுவிடுகின்ற இத்தகைய கூற்றுகளே திருக்குறளை அறம்
சார்ந்த பனுவலாக நிலைநிறுத்துகின்றன. எதிரிடையானவற்றை
ஊகித்து அறியும் வாசக எழுச்சியைப் பனுவல் பல இடங்களில்
தடுத்துவிடுகிறது.
இதனாலேயே திருக்குறளை வாசக எழுச்சியைத் தடுத்துவிடுகிற
தட்டையான பனுவல் என்று கூறிவிடமுடியாது.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தா னிடை (37)
கே. பழனிவேலு
அத்தகு கவிதைகளில்
பனுவலைக் கடந்து செல்ல
இயலாமல் போகிறது.
வெளிப்பட்டுவிடுகின்ற
இத்தகைய கூற்றுகளே
திருக்குறளை அறம்
சார்ந்த பனுவலாக
நிலைநிறுத்துகின்றன.
எதிரிடையானவற்றை
ஊகித்து அறியும் வாசக
எழுச்சியைப் பனுவல் பல
இடங்களில்
தடுத்துவிடுகிறது.புதிய பனுவல்  33
என்ற குறளும் பொறுத்தல் ஜ் ஊர்தல் எனும் எதிர்மைகளைக்காட்டி
அறத்தை முன்வைக்கின்றது. பொறுப்பவனுக்கும் ஊர்பவனுக்கும்
இடையில் இருக்கும் வேறுபாடுதான் அறம் எனச் சுட்டும் குறள்,
இவ்வேறுபாட்டை வாசகனையே உருவாக்கிக்கொள்ளச் செய்கிறது.
பல்லக்கைத் தூக்குதல் துன்பமானது, பயணிப்பது இன்பமானது;
தூக்குபவன் அறம் செய்தவன், அமர்ந்திருப்பவன் அறம் செய்யாதவன்
அல்லது பாவம் செய்தவன். இவற்றையும் தாண்டி அறம் செய்த காலம்
எது, இந்தப் பிறவியா, கடந்த பிறவியா? அறத்திற்கும் ஊழ் / விதிக்கும்
இருக்கும் தொடர்பு; தூக்குபவனின் இழிநிலை ஊர்பவனின்
பெருமிதம் என நீண்டுகொண்டே செல்லும் கூற்றுகள் அனைத்தும்
வெளிப்படையாகப் பனுவலின் தொடர்கள் உணர்த்தும் அகராதிப்
பொருண்மைக்கு அப்பால் தோற்றுவிக்கப்படுகின்றன. இத்தகைய
பல்வேறு விதமான பொருண்மைச் செறிவுகளையே பக்தின் கூற்று
எனக் கூறுகிறார்.
மனித வாழ்க்கையில் பல்லக்கைச் சுமத்தல், அதில் அமர்தல் பற்றிய
சொல்லாடல்கள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்து
வருகின்றன. அது இன்று வடிவமாற்றம் கொண்டிருக்கலாம்.
ராகுல்காந்திக்கும் அவருடைய காரை ஓட்டுபவருக்கும் உள்ள
வித்தியாசமாக இது தற்காலத்திற்கு நீண்டு வரலாம். இப்போது நமது
கூற்றைத் திருக்குறளின் கூற்றுக்கு எதிராகவோ அணுக்கமாகவோ
நீட்டுகிறோம். இப்படிப்பட்ட தொடர்ச்சியான உரையாடல்களால்
தான் ஒரு மொழி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மொழி
வெறும் சொற்களின் தொகுதியல்ல; அது கூற்றுகளின், உரைகளின்
தொகுதி என்று பக்தின் சுட்டுகிறார்.
நாம் எப்பொழுதும் பிறர் மற்ற சூழல்களில் பயன்படுத்திய
வார்த்தைகளையே பயன்படுத்துகிறோம். பொதுவார்த்தை என்ற
ஒன்று எப்படி இல்லையோ அதுபோல,  எந்த வார்த்தையும் யாருக்கும்
சொந்தமானது அல்ல எனும் பக்தின், நாம் பேசும் பேச்சுகள்/ கூற்றுகள்
பிறர் பேசிய பேச்சுகளே என்கிறார். இந்தப் ‘பிறரின் பேச்சு’ என்பது
தனிப்பட்ட பேச் சல்ல; சமூகத்தின் பேச்சு. தனிமனிதனாக
இப்பேச்சைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது போனாலும், சமூகப்
பேச்சுடன் இணைத்து நமது பேச்சை/ பொருளை வடிவமைத்துக்
கொள்கிறோம்.
வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று (11)
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் (64)
எனும் குறள்களின் புனைவு மதிப்பைக் கூட்டுவதாக அமிழ்தம் என்ற
சொல் திகழ்கிறது. அமிழ்தம் என்பதின் சமூகக் கூற்றுகளை அறியாத
கே. பழனிவேலு
நாம் பேசும் பேச்சுகள்/
கூற்றுகள் பிறர் பேசிய
பேச்சுகளே என்கிறார்.
இந்தப் ‘பிறரின் பேச்சு’
என்பது தனிப்பட்ட
பேச்சல்ல; சமூகத்தின்
பேச்சுபுதிய பனுவல்  34
வாசகனால் இக்கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள முடியாது. மேலும்,
இச்சொல்லுக்கு நேரடியான, அகராதிப் பொருளாக ஒற்றைப்
பொருளை அளிக்க முடியாது. முந்தைய பல்வேறு சமூக எதிர்
கொள்ளல்கள் வழியாக ஏற்கெனவே நமக்கு ஒரு பொருள் உருவாகி
இருக்கின்ற சூழலில், அமிழ்தம் என்பது ஒரு சொல்லாக மட்டு
மல்லாமல் ஒரு கூற்றாக, உரைகளின் தொகுப்பாக நம்மிடம்
படிந்திருக்கிறது.
திருக்குறள் முன்வைக்கும் ‘அமிழ்தம்’ என்ற கூற்று பக்தின்
சுட்டுவதைப்போலப் பேசுபவர் மற்றும் கேட்பவரின் எண்ணக்
கலவையாக, முந்தைய கூற்றிலிருந்து பொருளை உருவாக்குவதாக
அமைந்திருப்பதைக் காணலாம். இரண்டு குறள்களும் தமது சொற்கள்
வழியாக அமிழ்தம் என்பதை ஓரளவுக்குச் சுட்ட முற்படுகின்றன.
முதல் குறள் அமிழ்தம் வானத்திலிருப்பது என்பதையும், இரண்டாவது
குறள் அது இனிமையானது என்பதையும் வெளிப்படையாகச்
சுட்டுகின்றன. இவ்வெளிப்பட்ட கூற்றுகளுடன் கவிதை முடிந்து
விடவில்லை. வெளிப்படாத அமிழ்தம் பற்றிய பல்வேறு கூற்றுகள்
பாடலுக்குள்ளே மௌனமாக உறைந்துள்ளன. இக்கூற்றுகளைக்
கண்டடைந்த வாசகன் பாடலின்மீது வினைபுரியும் போதுதான்
பனுவல் உரையாடல் தன்மையதாக மாறுகிறது.
அமிழ்தம் வானத்திலிருப்பது - இனிமையானது என்ற செய்யுளால்
வெளிப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு அப்பால் சாவா, மூவா மருந்து-
இறப்பு, மூப்பைத் தடுப்பது; உயிர்களைத் தளிர்க்கச் செய்வது;
தேவர்களுக்கு மட்டுமே உரியது, அசுரர்களுக்குக் கிட்டாதது, மேலான
வா ழ்வைத் தருவது எனும் பல்வேறு பொருண்மைகளைக்
கொண்டுள்ளது. இவை குறளில் வெளிப்படையாக இல்லாதவை. சூழல்
சார்ந்தும் சமூக நடவடிக்கைகளாலும் வாசகன் எதிர்கொண்ட பிற
கூற்றுகளாலும் உருவாக்கப்படுகின்ற இப்பொருள்களே குறள்களுக்குப்
புனைவு மதிப்பைக் கூட்டுகின்றன. இத்தகைய பல்வேறு வெளிப்படாத
கூற்றுகளைக் கொண்டிருப்பதனாலேயே இந்தச் செய்யுள்கள்
உரையாடல் தன்மை உடையவையாக உள்ளன. அமிழ்தம் பற்றிச்
சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கும் கூற்றுகளை மழைக்கும், குழந்தை
களின் கைப்பட்ட கூழுக்கும் மடைமாற்றுகின்றபோது ஒரு சாதாரண
கூற்று புனைவு மதிப்பை மிகுதியாகப் பெறுகிறது. இவ்வாறான உள்
உறைந்துள்ள பல கூற்றுகள் நிறைந்ததாகத் திருக்குறள் திகழ்வதைக்
காணலாம். வெளிப்படாத கூற்றுகளின் தொகுதியாகத் திருக்குறள்
திகழ்வதற்குக் காரணம் குறைந்த சொற்களைக் கையாளும் கவிதை
வடிவமேயாகும். வெளிப்படாத கூற்றுகளினாலேயே அறத்தை
முன்வைக்கும் திருக்குறள், புனைவுத் தன்மையைத் தக்க வைத்துக்
கொண்டுள்ளது எனலாம். இதே தன்மையை அனிச்சம் குறித்து
வருகின்ற குறள்களிலும் (90, 1111, 1115, 1120) காணமுடியும்.
கே. பழனிவேலு
இக்கூற்றுகளைக்
கண்டடைந்த வாசகன்
பாடலின்மீது வினைபுரியும்
போதுதான் பனுவல்
உரையாடல் தன்மையதாக
மாறுகிறது.புதிய பனுவல்  35
திருக்குறளின் இரண்டாவது அதிகாரமான வான்சிறப்பு, மழையைப்
பற்றியது என நாம் அறிவோம். மழையைப் பற்றி வாசகன் அறிந்துள்ள
பல்வேறு விதமான கூற்றுகளை இணைத்துப் பார்க்கச் செய்வதன்
மூலம், குறட்பா முன்வைக்கும் கூற்றுகள் விரிவு பெறுகின்றன. மழை
பற்றிய பத்து குறட்பாக்களில் இரண்டில் மட்டுமே மழை என்ற
சொல் பயன்படுத்தப்படுகிறது. புயல், எழிலி, எனும் தொடர்புடைய
சொற்களுடன் ‘வானம் வழங்குவது, விண் பொய்க்காமல் தருவது,
விசும்பின் துளி, வானம் வறக்காமல் தருவது, வான் ஒழுக்கு.’ முதலிய
தொடர்கள் மழையைக் குறிக்க உண்டாக்கப்படுகின்றன. மழை, நீர்,
எழிலி, புயல் எனும் சொற்களை விட தொடர்நிலையில் அமைபவை
புனைவுத் தன்மையை மிகுவிப்பதை அறியலாம். நீர் அல்லது மழை
ஒருவர் கொடுத்து பெறத்தக்கது எனும் பொருள் இத்தொடர்களால்
உருவாக்கப்படுவதையும் காணலாம் . குறட்பாக்களில் மழை
வழங்கத்தக்கதாக இருப்பதைக் காணும் வாசகன், வழங்குபவரின்
உயர்வையும் பெறுபவரின் தாழ்வையும் இணைத்துப்பார்க்க
வேண்டியவனாகிறான். தொடர்ச்சியாக வானம் என்பது மேல்
உலகினரின், தேவர்களின் குறியீடாக மாறி, தேவர்கள் மழை
கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை நோக்கிச் செல்கிறது.
தானமும் தவமும் இல்லாதிருப்பதனாலேயே தேவர்களால் மழை
வழங்கப்பெறவில்லை. மழை இன்மையால் இந்நிலை மேலும் மிகும்;
தேவர்களுக்கான பூசைகள்கூட நடக்காது என்ற கருத்துகள் பனுவல்
சார்ந்தும்  பனுவலுக்கான வெளியில் நிகழும் கூற்றுகளாலும்
வந்தமைகின்றன. இயற்கையை, மழையைப் பற்றியதாக இருக்கும்
கூற்றுகள்கூட அறவகைப்பட்டவையாக மாற்றப்படுகின்றன. இத்தகு
அறக்கருத்துகளில்கூட திருவள்ளுவரின் தனிப்பட்ட நடைச் சிறப்பைக்
காணலாம்.
“கூற்று என்பது ஒரு முக்கியமான பிரச்சினைகளின் முடிச்சாகும்
எனும் பக்தின், மொழியின் அறிவியலை ஆராயும் போது அதன் சில
கூறுகளையும் (நடை, இலக்கணம் முதலியவற்றையும்) ஆராய்கின்றார்.
முதலாவதாக, நடையை ஆராயும் அவர், எந்த ஒரு நடையும்
கூற்றுகளுடனும் கூற்று வகைமைகளுடனும் பிரிக்க முடியாதபடி
தொடர்பு கொண்டிருக்கிறது என்கிறார். மேலும், எந்த ஒரு கூற்றும்
தனிப்பட்டதாகும். அதனால் அது பேசுபவர் அல்லது எழுதுபவரின்
தனித்துவத்தைப் பிரதிபலிக்கக்கூடும். அதாவது அது தனக்கான
தனிப்பட்ட ஒரு நடையைக் கொண்டிருக்கும் (2007: 63) என்கிறார்.
சுருங்கிய மொழியைக்கொண்டு ஒரு வாய்பாடு போல அமைந்துள்ள
குறள் பல்வேறு விதமான கூற்றுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதைக்
காணமுடிகிறது. இக்கூற்றுகள் அனைத்தும் குறளின் படைப்புத்
திறனால் ஒரு தனிப்பட்ட நடையைக் கொண்டு இயங்குகின்றன.
கே. பழனிவேலு
இயற்கையை, மழையைப்
பற்றியதாக இருக்கும்
கூற்றுகள்கூட
அறவகைப்பட்டவையாக
மாற்றப்படுகின்றன.
இத்தகு
அறக்கருத்துகளில்கூட
திருவள்ளுவரின்
தனிப்பட்ட நடைச்
சிறப்பைக் காணலாம்புதிய பனுவல்  36
தீ என்னும் சொல் எரித்தல், சுடுதல் எனும் பொருண்மையில்
உருவழக்குகளுடன் ஒரு கருத்துத் தொகுதியாக இயங்குகிறது. இதனால்
தீ பல்வேறு கூற்றுகளின்  தொகுப்பாக அமைந்திருக்கின்றது.
பொதுவாகத் தீ அழிவைத் தரக்கூடியது எனும் கருத்து பொது
மனத்தில் உருவாக்கப்பட்டு நிலைகொண்டுள்ளது. அத்துடன்
தீமையின் குறியீடாகவும் தீ பயன்படுத்தப்படுகிறது. திருவள்ளுவர்
தனது புனைவில் ‘தீ’ பற்றிய கூற்றுகளைத் தனது நடைச் சிறப்பால்
ஒரு சில சொற்களிலேயே தொகுத்து அளிக்கிறார். இதனால் தீயின்
பல்வேறு விதமான கடுமைகளையும் இன்னது என்று சுட்டாமலேயே
வாசகன் முன்னால் வைத்து வினைபுரியத் தூண்டுகின்றார்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் (202)
என்னும் குறட்பாவில் தீயவை, தீ என்னும் கூற்றுகள் பல்வேறு
விதமான புரிதல் சாத்தியமுடைய கூற்றுகளின் தொகுதியாக நின்று
பொருளை விரிக்கின்றன. அதுபோலவே,
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் (306)
என்னும் குறள் தீயின் தன்மைக்கு எதிரான பொருளைத் தனது
நடையினால் கொண்டுவருகிறார். பல்வேறு பொருண்மைகளுடன் ஒரு
தொகுதியாகத் திகழும் தீ பற்றிய கூற்றுகளுடன் வேறு கூற்றுகளைத்
தனது மொழி நடைமூலம் இணைத்து அப்பிற கூற்றுகளுக்குத் தீயை
மிஞ்சியதொரு கடுமையை ஏற்றுகின்றார். தான் அறிந்த ஒன்றை (தீயின்
கடுமையை) நுண்மையான அறமாறுபாடு உடையவற்றிற்கு (தீய செயல்,
சினம், வறுமை) ஏற்றும்போது அவற்றை நீக்கி இருக்க வேண்டியதன்
முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இது போலவே தனது நடையால்
தீயின் கடுமையை ஒப்பிட்டுத் திருவள்ளுவர் காமத்தின் தன்மையை
மிகுவிக்கிறார்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)
தொடின் சுடின் அல்லது காமநோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ (1159)
இப்பாடல்கள் வாசகன் அறிந்த தீயின் தன்மையைப் பற்றிய
கூற்றுகளின் அடிப்படையில் காமத்தின் இயல்பை உணர்த்துகின்றன.
திருவள்ளுவரின் நடை தீக்கு உரியதாகச் சுட்டப்படும் கடுமையைக்
குறைத்து, அக்கடுமைகளைக் காமத்திற்கு ஏற்றுகின்றது. தீயையும்
காமத்தையும் முரண்பட்ட தன்மையில் இணைப்பதன் மூலம்
இக்கவிதைகள் புனைவு மதிப்பைக் கூடுதலாகப் பெறுகின்றன. பக்தின்
கே. பழனிவேலு
இது போலவே தனது
நடையால் தீயின்
கடுமையை ஒப்பிட்டுத்
திருவள்ளுவர் காமத்தின்
தன்மையை மிகுவிக்கிறார்புதிய பனுவல்  37
சுட்டும் கூற்றுகளுடன் நடை பிரிக்கமுடியாதபடி தொடர்பு
கொண்டிருப்பதைத் திருவள்ளுவர் கையாண்டுள்ள கூற்றுகளால்
அறியமுடிகிறது.
சமூகம் உருவாக்கி உலவவிட்டுள்ள கூற்றுகளின் தொகுதியாகத்
தான் மொழி இருக்கிறது எனும் பக்தினின் கருத்தினை ஒட்டிப்
படைப்பு, இலக்கியம் ஆகியவையும் கூற்றுகளின் தொகுதிதான் என்று
புரிந்து கொள்கிறோம்.  எனில் படைப்பாளனின் பணி என்ன என்ற
கேள்வி எழுகிறது. படைப்பாளன் கூற்றுகளைத் தனது நடையில்
ஒருங்கிணைத்துத் தருகிறான். அதற்குமேல் ஆசிரியருக்கு எந்த
முக்கியத்துவமும் இல்லை. இதனை ரோலான் பார்த்தின் ‘ஆசிரியர்
இறந்துவிட்டார்’ என்று கூற்றுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம்.
அவர், “இலக்கியம் எழுதுகிறது, ஆசிரியர்கள் அல்ல; இலக்கியம்
சூனியத்திலிருந்து பிறப்பதில்லை என்பது இதன் கருத்து.. முன்னமேயே
எழுத்து (இலக்கியம்) இருப்பில் இல்லாவிட்டால் எந்தக் கவிஞரும்
படைப்பாளியும் எதையும் எழுதமுடியாது. முன்புள்ளவர்கள் எதை
எழுதி வைத்துள்ளார்களோ அதன் விரிவாக்கம் மட்டுமே’’ (2005:
159) என்று கூறுகிறார். அற இலக்கியங்களுக்கு இக்கருத்து முற்று
முழுதாகப் பொருந்தக் கூடியதாகும்.
திருக்குறள் சுட்டும் அறங்கள், தமிழ்ச் சமூகத்தில் புழங்கிக்
கொண்டிருந்த அறங்களே ஆகும். இந்த அறங்கள் எதையும்
ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாகக் கருதமுடியாது. ஆசிரியர்,
கூற்றுகளைத் தொடர்நிலையில் மொழிப்படுத்தும் பணியையே
செய்துள்ளார். இவ்வாறான மொழிப்படுத்தலின் நுட்பமே அறத்தை
உரைக்கும் பனுவலைப் புனைவுப் பனுவலாக இயங்கச் செய்கிறது.
கூற்றுகளின் பொருண்மைத் தொகுதிகளைப் புரிந்துகொண்டு பிற
கூற்றுகளுடன் இணைக்கின்ற திருவள்ளுவருடைய மொழித்
தொழில்நுட்பம் பிற அற இலக்கியங்களில் காணக் கிடைக்காததாகும்.
இதனாலேயே அறம் உரைக்கின்ற நோக்கத்திற்கு இடையிலும்
திருக்குறளால் ஒரு புனைவுப் பனுவலாகவும் இயங்க முடிகிறது.
துணைநூல்கள்
1970: வில்லியம் வில்லி, அறவியல் ஓர் அறிமுகம், கோ. மோ. காந்தி
(மொ. பெ), தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
1976: திருக்குறள் (பரிமேலழகருரையும் வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர்
ஆராய்ச்சிக் குறிப்புரையும்), குவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
1977- : க.த. திருநாவுக்கரசு, திருக்குறள் நீதி இலக்கியம், சென்னைப்
பல்கலைக்கழகம், சென்னை.
19 81: வி.வி. ஙிணீளீ லீ tவீஸீ, ஜிலீ மீ ஞி வீணீறீஷீரீவீநீ மினீ ணீரீவீஸீணீtவீஷீஸீ, ஹிஸீவீஸ்மீ க்ஷீsவீtஹ் ஷீயீ ஜிமீ ஜ்ணீs றிக்ஷீமீ ss, கிustவீஸீ.
கே. பழனிவேலு
இதனை ரோலான்
பார்த்தின் ‘ஆசிரியர்
இறந்துவிட்டார்’ என்று
கூற்றுடன் இணைத்துப்
புரிந்து கொள்ளலாம்.
அவர், “இலக்கியம்
எழுதுகிறது, ஆசிரியர்கள்
அல்ல; இலக்கியம்
சூனியத்திலிருந்து
பிறப்பதில்லை என்பது
இதன் கருத்துபுதிய பனுவல்  38
19 9 4: றிணீனீ விஷீக்ஷீக்ஷீவீs(ணிபீ.). ஜிலீ மீ ஙிணீளீ லீ tவீஸீ ஸிமீ ணீபீமீ க்ஷீ: ஷிமீ றீமீ நீtமீ பீ கீ க்ஷீவீtவீஸீரீs ஷீயீ ஙிணீளீ tலீ வீஸீ, விமீ பீஸ்ஷீபீமீ ஸ்
ணீஸீபீ ஸ்ஷீறீஷீsலீ வீஸீஷீஸ், கிக்ஷீஸீஷீறீபீ, லிஷீஸீபீஷீஸீ.
19 9 7: ஷிuமீ ஸ்வீநீமீ , மிஸீtக்ஷீஷீபீuநீவீஸீரீ ஙிணீளீ லீ tவீஸீ. விணீஸீநீலீ மீ stமீ க்ஷீ ஹிஸீவீஸ்மீ க்ஷீsவீtஹ் றிக்ஷீமீ ss, விணீஸீநீலீ மீ stமீ க்ஷீ.
2001: ப. மருதநாயகம், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, உலகத்தமிழாராய்ச்சி
நிறுவனம், சென்னை.
2003-: க. பஞ்சாங்கம், நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல், காவ்யா,
சென்னை.
2005-: கோபிசந்த் நாரங்: அமைப்பு மையவாதம் பின் அமைப்பியல் மற்றும்
கீழைக் காவிய இயல், எச் பாலசுப்பிரமணியன் (மொ. பெ.) சாகித்திய
அகாதெமி, புதுதில்லி.
20 0 7: வி.வி. ஙிணீளீ லீ tவீஸீ, ஷிஜீமீ மீ நீலீ நிமீ ஸீக்ஷீமீ s & ளி tலீ மீ க்ஷீ லிணீtமீ ணிssணீஹ்s. க்ஷிமீ க்ஷீஸீ கீ . விலிநிணிணி (ஜிக்ஷீணீஸீs.),
ஹிஸீவீஸ்மீ க்ஷீsவீtஹ் ஷீயீ ஜிமீ ஜ்ணீs றிக்ஷீமீ ss. கிustவீஸீ.
இக்கட்டுரை, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் ஆராய்ச்சி விருதிற்காக
மேற்கொள்ளப்படும் ஆய்வுத் திட்டத்தின்கீழ் எழுதப்பட்டது.
கே. பழனிவேலு
ஆய்வுத்தகைமையர்
தமிழியற்புலம்
புதுவைப்பல்கலைக்கழகம்
புதுச்சேரி

தமிழ் நெடுங்கணக்கும் வைப்புமுறையும்



புனல் க. முருகையன்

மனித மொழி இற்றைக்குச் சற்றேறக்குறைய 5 ஆயிரத்திலிருந்து 7
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால அளவில் தோன்றியிருக்க
வேண்டும் என்றும், மொழியை உருவாக்குவதற்கான உடலுறுப்புக்
களும் மூளை வளமும் 50,000 முதல் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பே
உருவாகிவிட்டன என்றும் பிலிவின் என்ற ஆங்கில நாட்டறிஞர்
கணக்கிட்டுள்ளார்.
கால வெள்ளத்தில் நிகழும் அனைத்தையும் மூளையால்
நினைவில்கொள்ள முடியாதென்பதாலும், இடம் காலம் கடந்து
எண்ணங்களையும் செய்திகளையும் அறிவிக்க வேண்டிய கட்டாயத்
தாலும் நிலைபேறுள்ள ஓர் ஊடகமாக வரிவடிவம் தோற்று
விக்கப்பட்டுள்ளது. வரிவடிவமே பிற்காலத்தில் நெடுங்கணக்கு எழுத்து
(கிறீஜீலீ ணீதீமீ tவீநீ ஷ் க்ஷீவீtவீஸீரீ) உருவாகக் காரணமாக அமைந்தது. வரிவடிவம்
தோன்றுவதற்கு முன்பே மனித மூளையில் மொழியின் இலக்கணம்
பதிவாகியுள்ளது. இதனைத் துணைக்கொண்டு மனிதன் பொருள்
களையும் செயல்களையும் வெளிப்படுத்தும் சொற்களை முறையாக
இணைத்துத் தொடர்களை உருவாக்கிச் செய்திப் பரிமாற்றம்
(சிஷீனீ னீ uஸீவீநீணீtவீஷீஸீ) செய்துகொள்ள வழிகோலிக் கொண்டான். இன்றைய
மொழியடிப்படையும் வளர்ந்தமைவும் இவ்வாறே நிகழ்ந்துள்ளன.
வரிவடிவமே பிற்காலத்தில்
நெடுங்கணக்கு எழுத்து
உருவாகக் காரணமாக
அமைந்தது. வரிவடிவம்
தோன்றுவதற்கு முன்பே
மனித மூளையில்
மொழியின் இலக்கணம்
பதிவாகியுள்ளது.புதிய பனுவல்  6
உலகில் உள்ள எல்லா எழுத்து முறைகளுமே ஒருவகையில்
கடன்பெற்ற அல்லது போலச் செய்துகொள்ளப்பட்டவையே.
ஏனெனில் தேவையான ஒன்றைக் கண்ணுறின் அதனைத் தோற்று
வித்துக் கொள்வது மனித இனத்தின் இயல்பு. இது மாந்தவியல்
துறையில்  (கிஸீtலீ க்ஷீஷீஜீஷீறீஷீரீஹ்) தூண்டிப்பரவல்  (stவீனீ uறீus பீவீயீயீutவீஷீஸீ) என்று
அறியப்படுகின்றது.
உலகில் உள்ள நெடுங்கணக்கு எழுத்து முறைகளில் மூன்று
மட்டுமே சுயமாக உருவாக்கப்பட்டவை என்று ஆய்வறிஞர்கள்
கருத்துற்றுள்ளனர். முதலாவது, மெசப்படோமியா நாட்டில் சுமேரிய
மக்களால் உருவாக்கப்பட்டது; சுமார் 5000 ஆண்டுகள்  பழைமை
உடையது. இது செமிட்டிக் எழுத்து முறை எனப்படும். இந்த எழுத்து
வடிவம் கூனிபாம்  (சிuஸீவீயீஷீக்ஷீனீ ) அதாவது, ‘ஆப்பெழுத்து’ என்று
அழைக்கப்படும். இரண்டாவது, அதற்கு 1,500 ஆண்டுகள் பிற்பட்ட
சீன எழுத்து வகையாகும். மூன்றாவது, மத்திய அமெரிக்காவில் உள்ள
மெக்ஸிகோ நாட்டில் தோன்றிய மாயா வகையாகும். இது 2,000
ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த பூர்வீக மாயா
இனத்தவரால் உருவாக்கப்பட்டது. எகிப்து, சிந்துவெளி எழுத்துக்
களும் தனித்து உருவாக்கப்பட்டவையே என்பதும் சிலரது கருத்தாகும்.
இருப்பினும் இக்கொள்கை இன்றளவும் விவாதத்திலேயேதான்
உள்ளது.
தொடக்கத்தில் நாடோடிகளாக இருந்த மனித இனம் ஆங்காங்கே
தங்கிக் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டது. நாகரிகம் தோன்றி
வளர்ச்சியுற்ற நிலையில் மனிதன் வாணிபம் செய்யவும் நாடு பிடிக்கவும்
பயணிக்கத் தொடங்கினான். மனித இனம் ஆப்பிரிக்காவில்
தோன்றியது என்பதும் நாகரிகம் நடுத்தரைக்கடல் பகுதியில்
தோன்றியது என்பதும் இன்றளவும் நில-வி வரும் கொள்கைகளாகும்.
திராவிட இனத்தவர் நடுத்தரைக்கடல் பகுதியில் சுமேரியாவிலேயே
நாகரிக மக்களாய் வாழ்ந்தனர் என்பது மெசப்படோமியா,
பாபிலோனியா ஆகிய இடங்களில் கிடைத்துள்ள அகழ்வாய்வுச்
சான்றுகளால் தெரிய வருகின்றது. சுமேரிய மொழி, பண்பாடு
ஆகியவற்றில் திராவிடக் கூறுகள், சிறப்பாகத் தமிழ்மொழி, இனப்
பண்பாட்டுக் கூறுகள் ஊடுற்றுக் கிடப்பது அறியப்பட்டு வருகின்றது.
பழைய கிரேக்க மக்களின் பண்பாடு, செயல் திறம், கடுமறம், இயற்சமயக்
கோட்பாடு ஆகியவை தமிழினத் தன்மைகளோடு ஒத்திருப்பதை
ஆய்வறிஞர்கள் பலகாலமாகவே கோடிட்டுக் காட்டிவருகின்றனர்.
நடுத்தரைக்கடல் நிலப்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்குமுன் தோன்றிய
செமிட்டிக் வரிவடிவ எழுத்து முறையே பழமையும் முதுமையுமானது
என்று கண்டோம். இதுவே பல கிளைகளாகப் பிரிந்து உலக
உருண்டையின் பல பகுதி மொழிகளின் எழுத்து வகைகளுக்கும்
தாயாக உள்ளது. செமிட்டிக் வரிவடிவின் தென்மேற்குக் கிளையான
புனல் க. முருகையன்
உலகில் உள்ள
நெடுங்கணக்கு எழுத்து
முறைகளில் மூன்று
மட்டுமே சுயமாக
உருவாக்கப்பட்டவை
என்று ஆய்வறிஞர்கள்
கருத்துற்றுள்ளனர்புதிய பனுவல்  7
அராமிக்  (கிக்ஷீணீனீ ணீவீநீ) வகையே பெருவாரியான ஆசிய மொழிகளின்
எழுத்துக்களுக்கும் அடித்தளமாக உள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஆரிய, திராவிட மொழிக்
குடும்பங்களின் வரிவடிவ அமைப்பு அனைத்திற்கும் அராமிக் வகையே
அடித்தளமாக உள்ளது. அசோகப் பேரரசன் (246 - 233, முன் பொது
ஆண்டு, மு. பொ . ஆ. ) கா லத்திற்கு முன்பிருந்தே பா ர சீகம்
ஆப்கானிஸ்தானம் அடங்கிய காந்தாரப் பகுதியில் அராமிக்
வரிவடிவைப் பின்பற்றிய கரோஷ்டி (ரிலீ ணீக்ஷீஷீstலீ வீ) என்னும் எழுத்து முறை
புழக்கத்தில் இருந்தது. இவ்வெழுத்து செமிட்டிக் முறைப்படியே
வலமிருந்து இடமாக எழுதப்பட்டது. அசோக மன்னனின் பிராகிருதக்
கல்வெட்டுகள் சில கரோஷ்டி எழுத்தில் உள்ளன. காந்தாரத்தில்
கரோஷ்டி வரிவடிவ நெடுங்கணக்குச் செம்மையான எழுத்தியல்
முறைப்படி இருக்கவில்லை. சில பிழைகளும் முரண்பாடுகளும்
காணப்பட்டன. இது ஏற்கனவே எழுத்தியல் இலக்கணம் பிழைபடாத
செம்மையுற்றிருந்த பிராகிருத, சமஸ்கிருத மொழிகளின் நெடுங்
கணக்கிற்குத் தகுதியுடையதாக இருக்கவில்லை. எனவே புதிய
நெடுங்கணக்கு எழுத்து முறை ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிராமீ
எழுத்தாகும். இந்த எழுத்து முறை அசோக மன்னனால் பயன்படுத்தப்
பட்டதால் ‘அசோகன் பிராமீ’ எனப்பட்டது. இந்த எழுத்து முறை
பொது ஆண்டு 300ஆம் ஆண்டிற்கு முன்பே புழக்கத்திற்கு வந்திருக்க
வேண்டும். வாய்மொழி வழக்கில் மட்டுமிருந்த சமஸ்கிருதம் பொது
ஆண்டு 150ஆம் ஆண்டிற்குப் பிறகே எழுத்துருவம் பெற்றது. அதாவது
ஏறத்தாழ பிராகிருதம் எழுதப்பட்டு 400 ஆண்டுகள் கழிந்த பின்னரே
சமஸ்கிருதம் வரிவடிவம் பெற்றது.
இலக்கண எழுத்தியல் அறிஞர்கள்  (றிலீ ஷீஸீஷீறீஷீரீவீst) விதிப்படுத்தித்
தோற்றுவித்த வரிவடிவத்தை வழக்கம்போல் வடவாரிய முனிவர்கள்
தெய்வீகமாக்கிக் கடவுள் படைத்தது என்று கூறி அவ்வெழுத்து
முறைக்கு மந்திர சக்தி உள்ளதாகப் புனைந்து மொழிந்தனர். பிராமீ
என்பது ‘பிரமலிபி’ அதாவது பிரமன் கொடுத்த எழுத்து என்றும்,
‘தேவநாகரீ’ அதாவது தெய்வ நகரீயம் - -நரகத் தேவதைகளின் எழுத்து
என்றும் விளக்கமளித்தனர். ஆனால் இந்த எழுத்து முறை ஒரிசா,
குஜராத் முதலிய மாநிலங்களில்கூடப் பின்பற்றப்படவில்லை. அவர்கள்
சமஸ்கிருதத்தையும் தத்தம் மொழி எழுத்துக்களாலேயே எழுதினர்.
இன்றும் சிலர் அவ்வாறே எழுதுகின்றனர். தமிழ் நீங்கலான மற்ற
திராவிட மொழிகளில் சமஸ்கிருத வர்க்க எழுத்துக்களுக்கு
இணையான வரிவடிவங்கள் உள்ளமையால் அவர்களும் தத்தம்
மொழி எழுத்துக்களிலேயே சமஸ்கிருத மொழியை எழுதினர். ஆனால்
தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் ஆதிக்கம்
பெற்றபோது அரசியல் செல்வாக்குடன் ஆவணங்களிலும் கல்
வெட்டுக்களிலும் இடம்பெற்றது. சமஸ்கிருத மொழி இலக்கியங்கள்
புனல் க. முருகையன்
தமிழ் நீங்கலான மற்ற
திராவிட மொழிகளில்
சமஸ்கிருத வர்க்க
எழுத்துக்களுக்கு
இணையான
வரிவடிவங்கள்
உள்ளமையால் அவர்களும்
தத்தம் மொழி
எழுத்துக்களிலேயே
சமஸ்கிருத மொழியை
எழுதினர்புதிய பனுவல்  8
தோன்றலாயின. சமஸ்கிருத மொழியைத் தமிழ் வரிவடிவில் எழுத
இயலாத காரணத்தால் ‘பல்லவ கிரந்தம்’ என்ற எழுத்து முறையை
சமஸ்கிருத மொழியின் வர்க்க எழுத்துகளுக்கு ஏற்ப உருவாக்கிக்
கொண்டனர். கிரந்தம் என்றால் நூல். நூல் எழுதப் பயன்பட்ட
எழுத்தாகையால் காரணப் பெயராக்கி ‘கிரந்த எழுத்து’ என்று
அழைத்தனர். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சமஸ்கிருத மொழி
நூல்கள் கிரந்த வடிவத்திலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிராகிருத மொழியின் வரிவடிவத்திலிருந்து வருவித்துக் கொள்ளப்
பட்டதே தமிழ் வரிவடிவமும், நெடுங்கணக்கு வைப்பு முறையும்
என்பதை நடுநிலை ஆய்வாளர்களால் புறக்கணிக்க இயலாது. இதனால்
தமிழ் மொழிக்கென்று ஏதும் தனித்த வரிவடிவம் இல்லையா? என்று
ஆதங்கப்படலாம். ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளடு
முன்தோன்றி மூத்த குடி’யாகிய தமிழனிடம் இன்று இருப்பதெல்லாம்
அவனது இலக்கியமும் இலக்கணமும் கலைகளுந்தானே.
1
பிராமீ நெடுங்கணக்கு முறையும் வரிவடிவ அமைப்பும் அப்ஜத்
(கிதீ ழீணீபீ) என்ற மெய்ய லி மட்டுமே கொ ண்ட வரிவடிவ
அமைப்பிலிருந்து பெறப்பட்டவை. எனினும் இந்திய நாட்டின்
எழுத்தறிவியல் (றிலீ ஷீஸீஷீறீஷீரீவீநீணீறீ ஷிநீவீமீ ஸீநீமீ ) முறைக்கேற்ப செம்மை செய்து
கொள்ளப்பட்டுள்ளது. பிராமீ எழுத்து வடிவம் வராதற்கு முன்பே
வாய்வழி மரபாக இருந்த இலக்கணம் அறிவியல் முறையிலான
எழுத்தியல் (றிலீ ஷீஸீஷீறீஷீரீஹ்) இலக்கணத்தைப் பெற்றிருந்தது. எழுத்துக்கள்
உயிர், மெய் என்று மட்டுமே ஒலிப்பியல் அடிப்படையில் வகுக்கப்
பட்டிருந்தன. பொருளையும் இலக்கணத்தையும் அறிவுறுத்தும்
கருவியாக அவை சொற்களில் இணைந்து நடக்கும் தன்மையை
இலக்கணப் புலவர்கள் அறுதியிட்டு விதி செய்துவிட்டிருந்தனர்.
அதாவது வரிவடிவம் வகுக்கப்படுவதற்கு முன்பே நம்மிடம் எழுத்தியல்
இலக்கண அறிவு வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது என்பது
மறுக்க முடியாத பேருண்மை.
இந்திய நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
ஆரிய, திராவிட இனங்கள் கலந்துறையத் தொடங்கிவிட்டன.
பொ.ஆ.மு. 4000 வாக்கில் ஆரியர்கள் வேதம் என்று சொல்லப்
படுகின்ற சில மந்திரச் செய்யுட்களுடன் வடமேற்கு இந்தியாவில் சிந்து
சமவெளிக்கு வந்தனர் என்றும் அவர்களின் வருகைக்கு முன்பே
அப்பகுதியில் நாகரிகம், பண்பாடு, உழவியல், கலையியல், கட்டடவியல்,
அரசியல் போன்றவற்றில் நல்லறிவு பெற்ற திராவிட இனத்தவர் ஊர்,
நகரங்களில் வாழ்ந்து வந்தனர் என்றும் பேராசிரியர் சுனீத்குமார்
சட்டர்ஜி, மாக்ஸ்முல்லர் முதலிய அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே
இந்தியாவில் காணப்படும் எந்தவொரு பண்பாட்டுக் கூறுக்கும்
இவ்விரு இனங்களுக்கும் பொதுவான ஒரு அடிநிலைப் படிவம்
(ஷிuதீstக்ஷீணீtuனீ ) இருப்பது தவிர்க்க முடியாததாகும். வடமொழியும் தமிழும்
புனல் க. முருகையன்
அதாவது வரிவடிவம்
வகுக்கப்படுவதற்கு
முன்பே நம்மிடம்
எழுத்தியல் இலக்கண
அறிவு வளர்ச்சி
அடைந்த நிலையில்
இருந்தது என்பது
மறுக்க முடியாத
பேருண்மைபுதிய பனுவல்  9
வேறு வேறானவை என்பதற்குச் சொல், பொருள், ஒலி என்பவையே
முழுக் காரணங்களாகும். இலக்கண, இலக்கியங்களில் பெருமளவிற்கு
ஒப்புமை நிலவுவதில் வியப்பொன்றுமில்லை. மேற்போக்கான
ஒப்பீட்டாய்வுகூட இவ்விரண்டு மரபிற்கும் உள்ள வேறுபாட்டினை
உறுதிப்படுத்தும் என்று ஸ்டீவர் என்ற இந்தியவியல் மொழியியல்
அறிஞர் கருதுகின்றார். பிராகிருத மொழியில் உள்ள கலப்பினச்
சொற்களை மூன்று வகையில் அடக்கலாம். அவை தற்பவம், தற்சமம்,
தேசியம் எனப்படும். தற்பவம், தற்சமம் என்பன இனமொழிகளிலிருந்து
பெறப்பட்டவை. தேசியம் என்பவை பழமையாக உள்ள சொற்கள்.
அதாவது நாட்டில் முன்பே வழக்கில் இருக்கும் சொற்கள்.
இச்சொற்களுக்கு சமஸ்கிருத மொழியில் அடிச்சொற்கள் இல்லை
என்று ருத்ரடா (பொ.ஆ. 900) கூறுகின்றார்.
மனித இனம் புதிதாக ஒன்றைத் தோற்றுவித்துக் கொள்வதைவிட
ஏற்கெனவே இருக்கும் ஒன்றைப் போன்று மற்றதைப் போலச் செய்து
கொள்வதையே பெரிதும் ஏற்றுக் கொள்ளும். மாந்தவியலில் இது
தூண்டுணர்வுப் பரவல்  (ஷிtவீனீ u றீu s பீவீயீயீus வீஷீஸீ) எனப்படும். இதன்
அடிப்படையில் நோக்கும் போது, இவ்விரு மொழி இலக்கணக்
கூறுகளில் எழுத்தியலிலேதான் பெருமளவு ஒற்றுமை காணப்
படுகின்றது. சமஸ்கிருத மொழியின் ஒலிகள், அசைகள் ஆகியவை
ஏனைய ஐரோப்பியக் குடும்ப மொழிகள் போலல்லாது, பெரிதும்
தமிழ்மொழி எழுத்தியற் பண்புகளையே பெற்றிருப்பதைக் கவனத்தில்
கொ ள்ளவேண்டும். உதா ரணத்திற்கு இரு மெ £ழிகளிலுமே
ஒலியன்களை முதல்நிலை, சார்புநிலை ஒலியன் என்று முறையே
பொருள், இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்
பட்டுள்ள எழுத்தியல் அலகுகளைச் (றிலீ ஷீஸீஷீறீஷீரீவீநீணீறீ uஸீவீt) சொல்லலாம்.
இவ்விரு ஒலியன்நிலைகள் தமிழில் முதல், சார்பு என்றும் சமஸ்கிருத
மொழியில் வர்ணம், அயோகவாகம் (ணீஹ்ஷீரீணீஸ்ணீலீ ணீ) என்றும் குறிப்பிடப்
படுகின்றன. அயோகவாகம் என்றால் நுகத்தில் பூட்டியதுபோல்
இணைந்து செல்லாது பிரிந்து இழுக்கப்படுவது என்று பதஞ்சலி
முனிவர் விளக்குகின்றார். அதாவது இடமும் முயற்சியும் ஒன்றாது.
அடுத்து வரும் எழுத்தின் பிறப்பிடத்தையே பெற்று நடக்கும். மேலும்
தமிழில் உள்ள உயிரளபெடை போன்றதே புலுத்தம் எனும்
மூன்றளபிசைக்கும் சமஸ்கிருத எழுத்து. ஆனால் தமிழில் உள்ளது
போல் இன்னிசை, சொல்லிசை, இசைநிறை, விளி என்று முறையே
யாப்பு, உருபு, வேற்றுமை ஆகிய விரிவாக்கம் பெறாதது. சமஸ்கிருத
மொழி புலுத்தம் சம்போதனம் என்று விளியில் மட்டுமே வரும்.
இதுபோன்று தூண்டுணர்வு பரவல் பெற்ற பல இலக்கணக் கூறுகள்
சமஸ்கிருத மொழியில் தமிழ் சார்ந்து காணப்படுகின்றன.
அசோகன் காலத்திற்கு 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்பே
இந்தியத் துணைக் கண்டத்தில் எழுத்து வடிவம் இருந்ததற்கான
புனல் க. முருகையன்
தேசியம் என்பவை
பழமையாக உள்ள
சொற்கள். அதாவது
நாட்டில் முன்பே வழக்கில்
இருக்கும் சொற்கள்.
இச்சொற்களுக்கு
சமஸ்கிருத மொழியில்
அடிச்சொற்கள் இல்லை
என்று ருத்ரடா
கூறுகின்றார்புதிய பனுவல்  10
கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அதற்குமுன் வரிவடிவம் இல்லையே
ஒழிய  எழுத்தியல், சொல்லியல் (னீ ஷீக்ஷீஜீலீ ஷீறீஷீரீஹ்), தொடரியல் (sஹ்ஸீtணீஜ்) ஆகிய
மொழியியல் அடுக்கு (லிவீஸீரீuவீstவீநீs லீ வீமீ க்ஷீணீக்ஷீநீலீ ஹ்) ஆய்வு இன்றைய மொழியியல்
ஆய்« வ £ டு ஒத் தெ ண்ணக் கூடிய அளவில் வ ளர்ச் சி யுற் ற
இலக்கணங்கள் இருந்தன. வளர்ந்திருந்த எழுத்தியல் அறிவைக்
கொண்டு அப்ஜத்  (கிதீழீணீபீ) ஆக இருந்த அராமிக் வரிவடிவத்தை
பிராகிருத மொழியின் மொழியலகு ஆகிய ஒலியன்களை எழுதும்
வகையில் அபுகிதா (கிதீuரீவீபீணீ) எனும் உயிர், உயிர்மெய்களை உருவாக்கிக்
கொண்டனர். அராமிக் மெய்யலிகள் அகர உயிர் மெய்களாகக்
கொள்ளப்பட்டன. இப்படி அகரத்தோடு கூடி உருவான எழுத்துக்
களே அயோகவாகம். அதாவது, அ உடன் நுகத்தில் பூட்டியதுபோல்
இணைந்து செல்லும் மெய் என்று வாசஸநேயி பிராதிசாக்கியம்
என்னும் ஒலி நூலுக்கு உரை எழுதிய உவட்டா என்பவர்
அயோகவாகம் என்பதற்கு வேறொரு விளக்கம் தருகின்றார். ஈண்டு,
புள்ளி இல்லா வெல்லா மெய்யும்
உரு வுருவாகி யகரமொடு யிர்த்தலும் - தொல். 17
என்பதனை ஒத்துக் காணல் வேண்டும். வாகேர்நகேல் என்பவர்
இதைச் சிறுவர்களுக்கு எழுத்துக்களைப் போதிக்கும் போது
சொல்லப்படும் கானா, ஙானா, சானா... போன்றது என்று கூறுகின்றார்.
எப்படியாயினும் அப்ஜத் எழுத்து முறை அபுகிதா அதாவது, அசை
எழுத்து  (உயிர்க்கும் மெய்) முறையாக மாற்றுரு பெற்றுள்ளது என்பதே
முறையான விளக்கமாகும்.
மெய்யலிகளைத் தனியாக ஒலிக்க முடியாது. எனவே
அவற்றுடன் உயிரொலிகள் சேர்க்கப்பட்டு ஒலிக்கப்பட்டது.
மெய்யலிகள் உயிர்ப்புப் பெற்றன. உயிர்க்கும் மெய்களாயின.
இவையே உயிர்மெய்கள்; அசையாக (sஹ்றீறீணீதீறீமீ ) வரக் கூடியவை; மூச்சுக்
காற்றுச் சிதறல்கள்  (ஜீuயீயீ) ஒவ்வொன்றாலும் உருவாக்கப்படும் ஒலி
அல்லது ஒலிக்குழுமம், ஒலியற்ற நிலையிலிருந்து ஒலி நிலைக்கு
உயர்ந்து, மறுபடியும் ஒலியற்ற நிலைக்கு வரும் ஒலிப்பின் விளைவே
அசை. ஒலியன் மொழியின் அலகு. அசை பேச்சின் அலகு. அசை,
ஒவ்வொரு மொழிக்கும் பெரும்பாலும் வேறுவேறாகவே இருக்கும்.
பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தனி உயிரோ, ஒன்று
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மெய்யலிகளை முன் கொண்ட
உயிரோ அசையாக வரும். தமிழில் உயிர் (ஸ்), மெய்யும் உயிரும் (நீஸ்),
உயிரும் மெய்யும்  (ஸ்நீ), மெய்யும் உயிரும் மெய்யும்  (நீஸ்நீ) ஆகிய
எழுத்துக்களை உறுப்பாகக் கொண்டு அசைகள் அமையும் (எ.கா.: அ,
கா, ஆள், கல்). இது மொராயிக் (விஷீக்ஷீணீவீநீ) எழுத்து முறை. அதாவது
மாத்திரை பெற்ற வரிவடிவ முறை. அபுகிதா வரிவடிவம் அசை
யெழுத்து வரிவடிவ முறை; மெய்யலிகள் ஒன்றோ ஒன்றிற்கு
மேற்பட்டவையோ இணைந்து உயிரொலியைக் கொண்டு முடியும்
புனல் க. முருகையன்
ஒலியன் மொழியின்
அலகு. அசை பேச்சின்
அலகு. அசை,
ஒவ்வொரு மொழிக்கும்
பெரும்பாலும்
வேறுவேறாகவே
இருக்கும்புதிய பனுவல்  11
எழுத்துக்களின் சேர்க்கை. அபுகிதா வரிவடிவ முறையைக் கொண்ட
வடமொழியில் அசைகள் உயிரொலியில்தான் முடியும். எனவே தனி
உயிரெழுத்து மொழிக்கு முதலில் மட்டும்தான் வரும். தனி மெய்யாயின்
சொல்லின் இறுதியில் மட்டுமே வரும். பெரும்பாலும் சொற்கள்
மெய்யில் முடிவதில்லை. அப்படி நேர்ந்தால் அவை ‘விராமா’ என்னும்
குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும். அதாவது எழுத்தின் கடைசி
அடிப்பகுதியில் ஒரு சிறிய வலப்புறமாகச் சாய்ந்த கோடு வரையப்படும்.
ஏனெனில் அகர உயிருடன் கூடிய வரிவடிவமே அம்மொழியின்
அடிநிலை வடிவம். தொல்காப்பியரும் இம்முறையைத்தான்
பின்பற்றுகிறார். இதனினின்றே மற்ற உயிர்மெய் வடிவங்கள்
பெறப்படுகின்றன. உயிர்மெய் வடிவத்தில் வரும் அதாவது, மெய்யடு
இணைந்து வரும் ஒவ்வொரு உயிரும் அவ்வவற்றோடு ஒத்த, அதாவது
அவ்வவற்றின் அடையாள உயிர் துணைக் குறியீடுகளைப் (ணீறீறீஷீரீக்ஷீணீஜீலீ )
பெற்று நிற்கும். தனித்து வரும் அதாவது, சொல்லின் முதலில் வரும்
உயிரொலிகளே முழு வடிவம் பெற்ற உயிர் எழுத்துக்கள். அசையில்
ஒன்றிற்கு மேற்பட்டு வரும் மெய்யலிகள் கூட்டுருவாக  -
கூட்டெழுத்தாக வரையப்படும். ஆனால் இது வடமொழி ஒலிப்பு
முறைக்கு மாறானது. எடுத்துக்காட்டாக அக்னி என்ற சொல் அ. க்னி
என்றுதான் எழுதப்படுகின்றது. இதில் க்னி என்பது கூட்டெழுத்தாக
அதாவது ஒரே வடிவத்தில் எழுதப்படுகின்றது. எனவே அது அ. க்னி
என்றுதான் ஒலிக்கப்படவேண்டும். ஆனால் அது அக். னி என்று ஒலிக்கப்
படுகின்றது. இது வரிவடிவத்தைச் சரியாக வரன்முறைப்படுத்தாததால்
ஏற்பட்ட தவறாகும்.
தற்போது உள்ள தமிழ் நெடுங்கணக்கு அமைப்புமுறை பிராமீ
அமைப்பை ஓர்ந்தமைந்துள்ளது. வடநாட்டுடன் வாணிபத் தொடர்பு
கொண்டிருந்த வணிகர்கள் அன்று வழக்கில் இருந்த பிராக்ருத
மொழியின் பிராமீ எழுத்துக்களைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு
வந்தனர் என்றும் அசோக மன்னருக்குப் பின்வந்த சமண முனிவர்
களால் இவ்வெழுத்துக்கள் நூற்களை எழுதப் பயன்படுத்தப்பட்டன
என்றும் தொல்லியல் அறிஞர் சுப்பராயலு கருதுகின்றார் (ஞி மீ மீ ஜீ க்ஷீவீஸ்மீ க்ஷீs,
20 0 9 , ஜ்ஜ்). ஆனால் பேராசிரியர் ராஜன், பிராமீ எழுத்துக்கள்
தமிழ்நாட்டில் தோன்றியவை என்று கூறுகின்றார் (தொல்லியல்
நோக்கில் சங்க காலம், 2004). தொல்காப்பியரின் எழுத்தியல் இதற்கு
மாறாக உள்ளது.
வணிகர்கள், சமணமுனிவர்களால் கொண்டுவரப்பட்ட பிராமீ
எழுத்துக்கள் தமிழ் மொழியின் ஒலியன் அமைதிக்கும் ஒலிப்பு
முறைக்கும் ஏற்பச் சிறு மாற்றங்களுடன் வழக்காறு பெற்றன. இந்த
வரிவடிவ நெடுங்கணக்கே தமிழ்ப் பிராமீ. அசோகனது பிராகிருத
பிராமீயிலிருந்து வேறுபடுத்தவே தமிழ் மொழிக்குப் பயன்படுத்தப்
பட்ட பிராமீ வரிவடிவம் ‘தமிழ்பிராமீ’ எழுத்து எனப்பட்டது. தனித்த
புனல் க. முருகையன்
எனவே அது அ. க்னி
என்றுதான்
ஒலிக்கப்படவேண்டும்.
ஆனால் அது அக். னி
என்று ஒலிக்கப்
படுகின்றது. இது
வரிவடிவத்தைச் சரியாக
வரன்முறைப்படுத்தாததால்
ஏற்பட்ட தவறாகும்.புதிய பனுவல்  12
சுயமான தமிழ்வரிவடிவம் அதாவது அசோகனது பிராமீ வரி
வடிவத்துடன் தொடர்பில்லாதது எனின், அதனை ஏன் பிராமீ என்று
அடையாளப்படுத்த வேண்டும்? தமிழி என்பதும் வேறொன்றிருப்
பதனை அறிவுறுத்த வேண்டியல்லவா? தமிழ்நாட்டில் தனித்த,
சுயமான வரிவடிவம் இருந்திருக்கலாம். இருந்திருக்க வேண்டும்.
தமிழனின் ஏனைய மரபுகள் மறைக்க, மடிக்கப்பட்டதுபோல் இதுவும்
வழக்கிறந்திருக்கலாம். எனினும் உரிய சான்றுகள் கிடைக்கப் பெறாமை
நமது துரதிஷ்டமேயாகும். மேலும் பிராமீ எழுத்துமுறை தமிழகத்தில்
மட்டுமன்றித் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பர-
வியதன் அடிப்படைக் காரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதற்குச் சமயமே காரணமாக உள்ளது என்பது புலனாகின்றது.
வானளாவிய பெருமைக்குரிய கிரேக்க எழுத்துக்கள் மறைந்து
ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ரோமன் எழுத்துமுறை
பரவியதற்குக் கத்தோலிக்கக் கிறித்தவ சமயமும், முகமதிய மதம் பரவிய
இடங்களில் அரேபிய எழுத்துமுறை ஆதிக்கம் பெற்றுள்ளதும்,
கன்பூஷியத்தால் சீன எழுத்து முறை ஜப்பான், கொரியா முதலிய
நாடுகளில் நிலைத்ததும் மதங்களால்தான். அதேபோல் அருக, பவுத்த
சமயங்களின் வரவால் தென்கிழக்காசிய நிலப்பரப்பெங்கிலும்
பிராமீயிலிருந்து தோன்றிய வரிவடிவங்கள் பயன்பாட்டிற்கு
வந்துள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களையும் ஆவணங்களையும்
அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது மொழிகளின் எழுத்துரு
வில் சமயங்களின் தாக்கமே மிகுந்திருப்பது தெளிவாக அறியப்
படுகின்றது. அரசியல் செல்வாக்காலும் எழுத்துரு ஏற்கப்படலாம்.
ஆங்கிலக் காலனி நாடுகளில் ரோமன் வரிவடிவம் எழுத்துப்
பெயர்ப்பாகக் (ஜிக்ஷீணீஸீsறீவீtமீ க்ஷீணீtவீஷீஸீ) கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியின் எழுத்திலக்கணமும் அதன் ஒலிப்பெளிமை
போன்றே இயல்பும் எளிமையும் ஒட்பமும் உடையது. தொல்காப்பியப்
பெருந்தகை எழுத்தியலின் சீர்மையும் நுட்பமும் நாடி, அதன் செவ்வி
தலைப்பட்டுத் தற்கால மேலை நாட்டறிஞர்களது ஆய்வு முறைக்குச்
சிறிதும் குறையாமல் அறிவியல் நோக்க அடிப்படையைக் கொண்டு
இலக்கணம் செய்துள்ளார். எனினும் அவர் காலத்தில் அல்லது அதற்கு
முன்பே வழக்கிற்கு வந்துவிட்ட, பயன்பாட்டில் வேரூன்றிவிட்ட,
எழுத்து முறையை அவரால் புறக்கணிக்க முடியவில்லை. எனவே, அவர்
தமிழ் மொழியின் ஒட்பத்திற்குச் சிறிதும் ஒவ்வாத ஒரு நெடுங்கணக்கு
முறையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றார். பல
சிக்கல்களை உருவாக்கும் அம்முறையினின்று அறிவு பூர்வமாக அவர்
விடுபட முயன்றும் தம்மதத்தை நிறுவவியலாது நிற்பது வெளிப்படை
யாகப் புலப்படத்தான் செய்கின்றது. சென்ற நூற்றாண்டில் ஆங்கில
மொழியின் எழுத்து முறையை மாற்ற முயன்ற அறிஞர்கள்
புனல் க. முருகையன்
கிடைத்துள்ள
ஆதாரங்களையும்
ஆவணங்களையும்
அடிப்படையாகக் கொண்டு
ஆராயும்போது
மொழிகளின்
எழுத்துருவில்
சமயங்களின் தாக்கமே
மிகுந்திருப்பது தெளிவாக
அறியப்படுகின்றது.
அரசியல் செல்வாக்காலும்
எழுத்துரு ஏற்கப்படலாம்புதிய பனுவல்  13
தோல்வியைத்தான் சந்தித்தனர். காரணம் வழக்காறு பெற்ற எழுத்து
முறையை முற்றிலும் புறக்கணிப்பது இயலாததாகும்.
தமிழ்மொழியின் எழுத்தியல் 10 உயிர்களையும் 18 மெய்களையும்
ஆய்தம் ஒன்றினையுமே தேர்வு செய்கின்றது. மூலத் திராவிட
மொழியலிக் கட்டிலும் 10 உயிர்களே நிறுவப்பட்டுள்ளன. ஐகார,
ஒளகாரங்கள் அயல் நிலைத் தன்மையால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
ஙகரம் மாற்றொலியாகவும், நகர, னகரங்கள் பெறுமளவில் மாற்று
எழுத்துக்களாகவும் இருந்த போதிலும் இம்மூன்று எழுத்துக்களும்
சீர்ஓர்மை (றிணீttமீ க்ஷீஸீ நீஷீஸீரீக்ஷீuநீவீtஹ்) வேண்டி ஒலியன்களாகக் கொள்ளப்பட்டு
நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐகார, ஒளகாரங்கள் தமிழ் நெடுங்கணக்கில் வேண்டாத
விருந்தாளிகள். இவை அதாவது, அய், அவ் என்பனவற்றின் போலிப்
பதிலிப் பெயர்களாகிய கூட்டுயிர்கள். இந்நிலை ஆய், விய், தீய், உய்,
ஊய், எய், ஏய், கொய், நோய் என்பனவற்றிற்கும் பொருந்தும்
என்பதைத் தொல்காப்பியர் ஏன் எண்ணிப் பார்க்கவில்லை-? என்பது
வியப்பாக உள்ளது. மேலும் அவற்றை அய், அவ் என்ற தொடர்
ஒலியன்களோடு பொருள், இலக்கண அடிப்படைகளில் வேறு
படுத்தியும் காட்டவில்லை. அதாவது ஐ/அய் -- ஒள/அவ் எனும்
இணைகள் வேற்று நிலை வழக்கில் வர வில்லை. தவறா ன
எழுத்தியலால் வந்த ஐ, ஒள_களின் நிலைப்பாட்டினை உறுதி
செய்வதாக நினைத்து முரண்பாடான நூற்பாக்களை அவர்
எழுதுகின்றார். இவற்றிற்குப் போலி வரிவடிவங்களைத் தருகின்றார்.
அய், அவ் என்ற போலி வடிவங்கள் தமிழ்மொழியில் தொழிற்படா;
ஒன்றிற்கு ஒன்றாய் உறழ்ந்து வருவனவாகும். பந்தல், பந்தர்; உளுந்து
உழுந்து போன்றனவே. ஐ, ஒள ஆகிய எழுத்துக்கள் உயிர் ஈறுகளே
என்பதனை நிலைகொ ளச் செய்ய அவற்றிற்கு அளபெடை
எழுத்துக்களாக முறையே இகர, உகரங்களைப் பரிந்துரை செய்வது
பொருள்செறி வாதமன்று. ஐகார, ஒளகாரங்களுக்கு அளபெடை
உயிர்களை இசைநிறையாகக் கொள்வதுபோல், அவற்றை அய், அவ்
என்று கொண்டாலும் அவற்றின் இனமெய்களான யகர, வகரங்களை
இசை நிறையாகக் கொள்ளலாம்.
ஐ ஒள வென்னு மாயீ ரெழுத்திற்
இகர வுகர மிசை நிறை வாகும் - தொல். 42
எனும் நூற்பா வலியக் கொள்வதாகும். தொல்காப்பியர் சமண
அளவையியலில் கைவந்த வித்தகர் என்று ஸ்டீவர் குறிப்பிடுகின்றார்.
அவ்விவாதத் திறமையைத் தலைக்கொண்டே ஐகார, ஒளகாரத்தின்
வரிவடிவக் கடன்பாட்டினை மெய்ப்பிக்கப் பெரிதும் விவாதிக்கின்றார்.
விவாதத் திறமையால் தொல்காப்பியரும் சமணரே என்பது ஸ்டீவரின்
புனல் க. முருகையன்
ஐகார, ஒளகாரங்கள்
தமிழ் நெடுங்கணக்கில்
வேண்டாத விருந்தாளிகள்.
இவை அதாவது,
அய், அவ் என்பனவற்றின்
போலிப் பதிலிப்
பெயர்களாகிய
கூட்டுயிர்கள்புதிய பனுவல்  14
கருத்து. பெரும்பாலான உரையாசிரியர்களும் சமணர் என்பதாலேயே
அவர்தம் உரைகளும் தர்க்கவாதமாகவே அமைந்துள்ளன.
மேலும் தமிழ் யாப்பியலில், கால அளவைவிட கணத்தின் அளவே
அசைகளைச் சீர்களுக்கு உறுப்பாக்குவதில் தலையாயப் பங்கினைச்
செய்கின்றது. நெட்டுயிர்கள் யாண்டும் குறுக்கம் பெறாதவழி ஐகாரம்
மட்டும் ஒரு மாத்திரையாய்க் குறுகி ஒலிக்கும் என்பதும் தாளவகைப்
படாது  (ஸீஷீt னீ மீ tக்ஷீவீநீணீறீ). மேலும் நெட்டுயிர்கள் யாண்டும் குறுகி
ஒலிப்பதில்லை. நன்னூல் ஆசிரியர் தன்னைத் தான் மொழியும் வழியின்
அன்றி வேறிடத்து ஐகாரம் இரண்டு மாத்திரை பெறாதென்கின்றார்.
மக்கள், மக்காள் என்பது போல் விளியில் அன்னை, அன்னாய் என்று
வருவதும், ஐகாரம் ஈருயிரன்று; உயிரும் மெய்யும் கூடிய அய் எனும்
தொடர்ச்சியே என்பது இலக்கணக் காட்டால் விளக்கப்படுகின்றது.
ஐகாரத்திற்கு இத்துணை சொன்ன ஆசிரியர், ஒளகாரத்தை ஏதோ
கடனுக்கோதி மாற்றாந்தாய்ப் பிள்ளையாக்கிவிட்டார். ஆரிய
மொழியில் உயிரொலிகள் ஊடறுத்து பிளவில்லா உடனிலையாகவும்
(சிறீustமீ க்ஷீ) வருவதால் ஆண்டு ஈருயிர் அமைவு நிலை அவசியமாகின்றது.
விட்டிசைத்தும் (பி வீணீtus) உடம்படுமெய் (நிறீவீபீமீ ) பெற்றும் வருவதில்லை;
மாறாக அடுத்தடுத்து வரும் உயிரொலிகள் ஒன்றோடொன்று
ஊடறுத்துக் கலந்து ஒரே உயிரொலி போல் ஒலிக்கும். இவற்றை
அவ்விலக்கணத்தார் சந்தி அக்கரம் என்பர். அதாவது புணர்ச்சியால்
பிறந்த உயிர்.
சமஸ்கிருத மொழி எழுத்தியல்படி ஏ, ஓ, ஐ, ஒள என்பவை
நெடில்தன்மை கொண்ட ஓருயிராம் தன்மையவை. அவை ஒலி
நிலையில் ஈருயிர்கள்; ஒலியன் நிலையில் ஓருயிர். (கீ வீபீலீ ணீtணீ விவீsக்ஷீணீ 1872:
137); எ.கா.: அ+இ = ஏ, அ+உ = ஓ, அ+ஏ = ஐ, அ+ஓ = ஒள என்பன
வடமொழியில் சந்தி எழுத்து முறை. ஆங்கிலத்தில் ஈருயிர்கள் வேற்று
நிலை வழக்கில் வந்து ஒலியன்களாகின்றன. எ.கா.  தீut, தீஷீt, தீவீt, தீஹ்tமீ
என்பனவற்றில் முறையே அ, ஒள; இ, ஐ என்பன வேற்றுநிலை
வழக்கில் வந்துள்ளன.
தமிழ் மொழியில் சந்தியக்கரமாகவோ வேற்றுநிலை வழக்காகவோ
வராத அஇ, அய், அஉ, அவ் இணைகள் ஈருயிர்கள் அல்ல உயிரும்
மெய்யுமாகிய தொடர்களே. தொல்காப்பியர் ஐகாரத்தைப் பற்றி நான்கு
நூற்பாக்கள் செய்துள்ளார்.
அகர இகர மைகாரமாகும் - தொல். 54
இது வடமொழிச் சந்தியில் தோன்றும் உறுப்பெழுத்துக்கள் போன்றது.
அதாவது, அகரம் இகரம் ஆகிய இரண்டு உயிரொலிகளும்
அடுத்தடுத்து விட்டிசையோ உடம்படுமெய்யோ பெறாது, ஒலிப்பில்
நாவானது அகரத்தை உருவாக்கும் நிலையிலிருந்து முயற்சி
புனல் க. முருகையன்
தமிழ் யாப்பியலில், கால
அளவைவிட கணத்தின்
அளவே அசைகளைச்
சீர்களுக்கு
உறுப்பாக்குவதில்
தலையாயப் பங்கினைச்
செய்கின்றது.
நெட்டுயிர்கள் யாண்டும்
குறுக்கம் பெறாதவழி
ஐகாரம் மட்டும் ஒரு
மாத்திரையாய்க் குறுகி
ஒலிக்கும் என்பதும்
தாளவகைப் படாதுபுதிய பனுவல்  15
விகற்பமின்றி தொடர்ந்து இகர நிலைக்கு வந்து அசையில் முகடு
(ஜீமீ ணீளீ ) ஆக நின்று ஓரசைக்கே உறுப்பாக அமைந்தால் அது ஈருயிர்
(ஞி வீஜீலீ tலீ ஷீஸீரீ) ஆகும். மேலும் அவ்வொலித் தொடர் அகர, யகர
இணையடு வேற்றுநிலை வழக்கில் வந்து ஒலியன் நிலை
பெறவேண்டும். அவ்வாறு அமையின், அவை ஒரே ஒலியாக நெட்டுயிர்
போல் ம £த்திரையான் கருதப்பட்டு எழுத்தியல் விதிப்படி
நெடுங்கணக்கில் உயிர்களோடு ஒப்பப்பட்டு இடம்பெறும். அஇ
என்பது அய் என்பதுடன் வேற்று நிலைப்படவில்லை என்றால் அவை
அய் போன்றே உயிரும் மெய்யுமாகவே வரன்முறை செய்யப்படும்.
ஆனால் இன்றைய ஒலிப்பு முறைப்படி இவை உயிரும் மெய்யுமாகவே
ஒலிக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சிச் சிக்கலில் எல்லாம் நம்மைப்
பணிக்காமல் அவரே வேறொரு நூற்பா தந்து எளிதாக்கி விடுகின்றார்.
அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயெ னெடுநஞ்சினை மெய்பெறத் தோன்றும் - தொல். 56
அகர உயிரும், அடுத்து வரும் யகர மெய்யும் இணைந்தும் ஐ எனும்
நெட்டுயிரைத் தரும் என்பது முன்னதோடு முரண்படுகின்றது.
இவ்வரன் முறையை முன்னதின் போலியாகக் கொண்டால், பந்தல்,
பந்தர்; உழுந்து, உளுந்து; மங்களம், மங்கலம் போன்றவற்றில் வரும்
எழுத்துக்களே போலாகும். மேலும்,
இகர யகர மிறுதி விரவும் - தொல். 58
என்ற நூற்பாவால் இகர உயிரும் யகர மெய்யும் இறுதியில் உறழ்ந்து
வரும் இயல்பின என்றும் அவ்விடத்து அவை ஒலிப்பில் அல்லது
எழுத்தில் வேறுபடினும் பொருள் தருவதில் வேறுபாடில்லை என்று
உறுதி செய்கின்றார். இதன்படி அஇயும், அய்யும் உறழ்வு வழக்கு (யீக்ஷீமீ மீ
ஸ்ணீக்ஷீவீணீtவீஷீஸீ) என்று உறுதி செய்கின்றார். அவ்வாறெனின் அகர, இகரக்
கூட்டுயிர் ஒலிக்கு இடமும் பயன்பாடும் இல்லாமல் போய்விடுகின்றது.
ஓரள பாகு மிடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான - தொல். 57
என்பதனான், அய் என்றொலிக்கும் ஐ எனும் வடிவம், சொல்லின்
இடையில் வேறோர் இடை நா ஒலி - யகர மெய்க்கு முன் வரும்போது
மட்டுமே  - யகர மெய் நின்று ஓரளபே பெறுமென்று கூறுவதன்
மூலம் அறியலாம். உரையாசிரியரின் எடுத்துக்காட்டின்படி இடையன்,
மடையன் என்பனவற்றில் இடய்+அன் = இடயன், மடய்+அன் =
மடயன் என்பதே புணர்ச்சி விதிக்கும், இயல்பு நிலைக்கும் ஒத்து
அமைகின்றது. இடை, மடை என்று ஐகாரத்தை வலிதிற் பெற்று
நெட்டுயிர் குறுகுவதாகக் கொள்வது செயற்கை விதியேயாகும். இது
கொண்டது மெய்ப்பிக்கும் தந்திர உத்தியாகும்.
புனல் க. முருகையன்
இடை, மடை என்று
ஐகாரத்தை வலிதிற்
பெற்று நெட்டுயிர்
குறுகுவதாகக் கொள்வது
செயற்கை விதியேயாகும்.
இது கொண்டது
மெய்ப்பிக்கும் தந்திர
உத்தியாகும்.புதிய பனுவல்  16
ஐகார ஈருயிர்க்கு இத்துணை சொல்லிய தொல்காப்பியர்
ஒளகாரத்திற்கு ஒரேயரு நூற்பா மட்டும் செய்து அதனை
மாற்றாந்தாய் மகவாக்கிவிட்டார். தொல்காப்பியரின் கொள்கையின்படி
ஐகாரமும் ஒளகாரமும் எல்லாவிதத்திலும் சம உரிமையுடைய
ஒலியன்கள். சீர்ஓர்மைப்படி ஐகாரத்திற்கு உரிய அனைத்து ஒலியன்
விதிமுறைகளும் ஒளகாரத்திற்கும் பொருந்தி வரவேண்டும். ஆனால்
ஒளகாரம் மிகமிக அருகிய வழக்காகவே உள்ளது. மேலும்,
அகர உகரம் ஒளகாரம் - தொல். 55
எனில் இவ்வீருயிர் இதழ் குவிந்து பிறக்க வேண்டும்.
ஆனால் ஒளகாரம், அவ் என்று கீழிதழ் மேற்பல்லை நெருங்கி
அமைவதாலேயே பிறக்கின்றது. எனவே ஐகாரம், அய் என்றும்
ஒலிக்கப்படுவதாலும், இகரமும் யகரமும் ஈற்றில் ஒலிப்பு வேற்றுமை
பெறாமையாலும் மொழிக்கிடையில் யகர மெய் ஒற்றிய அகர உயிர்
போல் தொழிற்படுவதாலும் ஐயும் ஒளவும் ஒத்த ஒலியன் சீர்மையைப்
பெறாமையாலும் இவ்விரு ஒலித் தொடர்களும் உயிரும் மெய்யுமே
அன்றி, உயிரும் உயிரும் ஒன்றிய ஈருயிர்கள் அல்ல. மேலும்
வடமெ £ழியில் புணர்ச்சியில் பிறந்த ஐ, ஒள போன்றவை
அன்மையானும் பிராமீ நெடுங்கணக்கு முறையினின்று பெறப்பட்டவை
என்பதற்கான அழுத்தமான ஆதாரங்கள் உண்மையானும் தமிழ்
நெடுங்கணக்கில் உள்ள ஐ, ஒள ஆகியவை ஈருயிர் சந்தியுயிர் அல்ல
என்பது ஐயமற நிறுவப்படுவதோடு, தேவையற்ற வரிவடிவம் என்றும்
தள்ளப்படுகின்றன.
பேச்சின் அலகு அசை என்றும் மொழியின் அலகு ஒலியன் என்றும்
கண்டோம். அசைகளைத் தனியாக ஒலிக்கலாம். ஒலியன்கள் ஒன்று
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஒலிகளின் பதிலிகள். சொற்களில்
ஒலிகளைத் தனியாக உணரலாம். ஆனால் தனியாக ஒலிக்க முடியாது.
கல் என்பது அசை. க+ல் என்பன வரிவடிவங்கள். க்+அ+ல் என்பன
ஒலியன்கள் அல்லது ஒலிகள். கல் என்ற சொல்லில் வரும் க், அ, ல்
என்பன தம்மை அடுத்து உள்ள ஒலிகளின் கூறுகளோடும் கலந்தே
இருக்கும். வானவில்லில் தோன்றுவது ஏழு நிறங்களே என்றாலும்
அந்நிறங்கள் இணையுமிடத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள ஒரு
தனி நிறம் இருப்பது போன்றே க், அ, ல் என்ற ஒலிகள்
ஒன்றோடொன்று இணையுமிடங்களிலும் அவை அடுத்தடுத்து வரும்
ஒலிகளின் ஊடறுப்புடனேயே இருப்பதை ஒலியியல் கருவிகள்
காட்டுகின்றன. எனவே தான் க், அ, ல் என்ற ஒலிகளின் இயற்பியல்
கூறுகளை இணைத்து கல் என்ற சொல்லை உருவாக்க இயல்வதில்லை.
இதனால்தான் கணினி மொழியில் எழுத்திலிருந்து பேச்சு  (ஜிமீ ஜ்t tஷீ
sஜீமீ மீ நீலீ ) உருவாக்கத்தில் வெற்றி பெற்றுள்ள அளவுற்குப் பேச்சிலிருந்து
எழுத்துக்களை (ஷிஜீமீ மீ நீலீ tஷீ tமீ ஜ்t) உருவாக்க முடிவதில்லை.
புனல் க. முருகையன்
வானவில்லில் தோன்றுவது
ஏழு நிறங்களே என்றாலும்
அந்நிறங்கள்
இணையுமிடத்தில்
ஒன்றுடன் ஒன்று
கலந்துள்ள ஒரு தனி நிறம்
இருப்பது போன்றே க், அ,
ல் என்ற ஒலிகள்
ஒன்றோடொன்று
இணையுமிடங்களிலும்
அவை அடுத்தடுத்து வரும்
ஒலிகளின்
ஊடறுப்புடனேயே
இருப்பதை ஒலியியல்
கருவிகள் காட்டுகின்றனபுதிய பனுவல்  17
மொழியின் அலகாகிய ஒலியன் உயிரும் மெய்யும் மட்டுந்தான்.
எழுத்தியல் முறைப்படி ஒலியன்களுக்கு எழுத்துரு அதாவது, ஒலி
வடிவத்திற்கு வரிவடிவம் தர வேண்டுமானால் உயிரும் மெய்யுமாகிய
ஒலி வடிவங்களுக்கு வரி வடிவம் தரல் வேண்டும். உயிர்மெய் என்ற
வடிவம் தோன்றாக் காலத்து மெய்யலிகளையே உணர்ந்திருந்த
மனிதன், பின் அவற்றை ஒலிப்பெளிமை பற்றி அகரமொடு ஒலித்ததன்
விளைவேயாகும். தொல்காப்பியரும்,
மெய்யினியக்கம் அகரமொடு சிவனும் - தொல். 46
என்று நூற்பா செய்துள்ளார்.
உலக மொழிகளுள் கிரேக்க மொழியே மொழியலகுகளை உயிரும்
மெய்யுமெனத் தனித்து வருவித்தது. அதன் பின்னரே லத்தீனும் ஏனைய
ஐரோப்பிய மொழிகளும் வரிவடிவங்களைப் படைத்துக்கொண்டன.
தமிழ் மொழியின் வரிவடிவத்தையும் தொல்காப்பியர் எழுத்தியல்
அறிவியல்படி உயிரும் மெய்யுமாகத்தான் வரிவடிவ அலகு
செய்துள்ளார். ஏனெனில், இவ்வடிப்படை அலகு முறையை ஏற்கனவே
தமிழ் இலக்கணம் கண்டோர் அறுதியிட்டுவிட்டனர். ஆனால்
வழக்கிற்கு வந்துவிட்ட வரிவடிவத்தைப் பின்தள்ள முடியாத
காரணத்தால் தொல்காப்பியர் உயிர், மெய், உயிர்மெய் என்ற மூன்று
விதமான வடிவங்களை ஏற்றுக்கொண்டு, அவ்வடிவங்களை
மெய்ப்பிக்க பலவகையா ன அளவைகளில் விவாதங்களைப்
பரிந்துரைக்கின்றார்.
வரலாற்றடிப்படையில் வரிவடிவ வளர்ச்சியில் மூன்று நிலைகள்
உள்ளன. அப்ஜத் (மெய் மட்டும்), 2. அபுகிதா (மெய், உயிர்மெய்),
3. மொராயிக்
2
(விஷீக்ஷீணீவீநீ) (உயிர், மெய் மட்டும்). தமிழில் வரிவடிவ நிலை
அமைந்திருந்தால் மூன்றாவது நிலையில்தான், அதாவது உயிரும்
மெய்யுமாக மட்டும், அமைந்திருக்க வேண்டும். ஏனெனில், தமிழ்
இலக்கணிகளிடம் இத்தகு எழுத்தியல் அறிவு வளர்ந்துவிட்டிருந்தது
என்பதனை அவர்களின் புணர்ச்சி இலக்கணத்திலிருந்து அறியலாம்.
ஒரு சொல்லின் இறுதியில் உயிர்மெய் எழுத்து வருமானால் அதை
உயிர் ஈறாகவும் ஒரு சொல்லின் தொடக்கத்தில் உயிர்மெய் வருமானால்
அதை மெய் முதலாகவும் கொள்கின்றனர். மேலும் ஈற்றெழுத்து,
முதலெழுத்துக்களை வைத்து உறழ்ந்து புணர்ச்சியின் நான்கு வகைகள்
பற்றிக் கூறும்போது, உயிர்ஈறு + உயிர்முதல், உயிர்ஈறு+மெய்முதல்,
மெய்யீறு+உயிர்முதல், மெய்யீறு+மெய்முதல் என்ற நான்கு வகைகளே
கூறப்படுகின்றன. இந்த இடங்களில் உயிர்மெய் ஈற்றெழுத்தாகவோ
முதலெழுத்தாகவோ எங்கும் கூறப்படவில்லை என்பதையும்
மனங்கொள்ள வேண்டும். சொற்கள் தொடர் நிலையாக வரும்போது
ஏற்படும் ஒலி மாற்றங்களின் அடியலிகள் உயிர் அல்லது மெய்
புனல் க. முருகையன்
தமிழ் இலக்கணிகளிடம்
இத்தகு எழுத்தியல் அறிவு
வளர்ந்துவிட்டிருந்தது
என்பதனை அவர்களின்
புணர்ச்சி
இலக்கணத்திலிருந்து
அறியலாம்புதிய பனுவல்  18
என்றே குறிக்கப்படுகின்றனவே அன்றி, உயிர்மெய் என்ற கலைச்சொல்
பயன்படுத்தப்படவில்லை.
நிலைமொழி ஈற்று ஒலியையும் வருமொழி முதல் ஒலியையும்
இணைத்து ஒலிக்க வேண்டிய நிலையில் விளையும் ஒலிமாற்றங்களைச்
சொல்வது புணர்ச்சி இலக்கணமாகும். மொழிமுதலில் வரும்
இருபத்தியிரண்டும் மொழியிறுதியில் வரும் இருபத்து நான்கும் ஆகிய
நாற்பத்து ஆறு ஒலிகளும், உயிரும் மெய்யுமே அன்றி, உயிர்மெய் அல்ல
என்பதனைத் தொல்காப்பியர் (நூற்பா 104) சுட்டுகின்றார். இதன்
வாயிலாக அவரது வரிவடிவ அலகு உயிரும் மெய்யும் மட்டுமே
என்பது மேலும் தெளியப்படுகின்றது.
...... ..... நெறிநின் றியலும்
எல்லா மொழிக்கு மிறுதியு முதலும்
மெய்யே யுயிரென் றாயீரியல. - தொல். 104
தொல்காப்பியரின் எழுத்தியல் கொள்கையின்படி உயிரும் மெய்யுமே
அடிப்படை வரிவடிவக் கூறுகள் என்று பார்த்தோம். மெய்
வடிவத்திலிருந்தே அகர உயிர்மெய் முதல் அனைத்து உயிர்மெய்
களையும் துணைக்குறியீடிட்டு வருவிக்கின்றனர். புள்ளியில்லா
மெய்யின் வரிவடிவமே அகர உயிர்மெய்யாகும். இதன் துணைக்
குறியீடுகளை இணைத்து அனைத்து உயிர்மெ ய்களுக்கா ன
வரிவடிவமும் பெறப்படும். எ.கா.: க+£ = கா. பின்வரும் தொல்காப்பிய
நூற்பா இதனைத் தருகின்றது.
புள்ளி யில்லா வெல்லா மெய்யும்
உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும்
ஏனை யுயிரொடு வுருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல வுயிர்த்த லாறே - தொல். 17.
தமிழிலும் சமஸ்கிருத மொழியிலும் உயிரும் மெய்யுமே வரிவடிவ
அலகுகள். உயிர்மெய் என்ற வரிவடிவம் அராமிக் மெய்வடிவங்களைக்
கடன் பெற்றதன் விளைவேயாகும்.
னகர விறுவாய்ப்
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப - தொல். 2.
மெய்யோ டியையினு முயிரிய றிரியா - தொல். 10.
என்பனவற்றா ல் தொ ல்கா ப்பியர் கொள்வது பதினெட்டும்
மெய்யெழுத்துக்களே என்பதும் அவை உயிர் மெய்கள் அல்ல என்பதும்
விளங்கும். இவ்விளக்கமே அவர் ‘னகர விறுவாய்’ என்று முதற்
சூத்திரத்தில் கூறியதற்கும் பொருந்தும். எனவே தொல்காப்பியரது
கொள்கையின்படி மெய்யலிகளே அடிநிலை வடிவங்கள்;
புனல் க. முருகையன்
தமிழிலும் சமஸ்கிருத
மொழியிலும் உயிரும்
மெய்யுமே வரிவடிவ
அலகுகள். உயிர்மெய்
என்ற வரிவடிவம்
அராமிக்
மெய்வடிவங்களைக்
கடன் பெற்றதன்
விளைவேயாகும்புதிய பனுவல்  19
உயிர்மெய்கள் அல்ல என்பது மறுபடியும் வலியுறுத்தப்படுகின்றது.
அவ்வாறிருக்க,
மெய்யி னியற்கை புள்ளியடு நிலையல் - தொல். 15.
என்று விதந்தோதியுள்ளது அவரது எழுத்தியல் கொள்கைக்கு
முரணானதும் தெளிவில்லாததுமாகும்.
மெய்யலிகளை வரிசைப்படுத்தியுள்ளமைக்கும் அவற்றை
அடுத்துத் தொகுத்துள்ளமைக்கும் இயைபு இல்லை.
வல்லெழுத் தென்ப கசட தபற - தொல். 19.
என்று பிறப்பாக்க அதாவது, முயற்சி ஓர்மையால் அவ்வொலிகளை
ஒரே குழுவாக்கிய ஆசிரியர், றகர வல்லொற்றினை அதன்
பிறப்படிப்படையில் டகர, தகரங்களுக்கு இடையில் வையாது,
மெய்யலிகளின் வரிசையில் ஈற்றயற்படுத்துகின்றார். றகரத்தின்
பிறப்பிடம் மேலண்ணத்தின் அண்பல் பகுதியாகும். எனவே
இடையண்ணப் பகுதியில் பிறக்கும் டகரத்திற்கும் மேற்பல்லை
இடமாகக் கொண்டு பிறக்கும் தகரத்திற்கும் இடைப்பட்ட அண்பல்
பகுதியில் பிறக்கும் றகரத்தை அவ்விரு ஒலிகளுக்கும் நடுவில் வைப்பதே
சரியாகும். அவ்வாறு அன்றி றகரத்தை ஈற்றயற்படுத்தியது முறைப்
பிழைப்பாகும். அயற்சாயல் நெடுங்கணக்கால் வந்த குழப்பம். ஐந்து
வர்க்க வரிசைகளைக் கொண்ட நெடுங்கணக்கு முறையைப்
பின்பற்றியதால் தமிழுக்குக் கூடுதலாக உள்ள ஆறாவது ஒலியை
இறுதியில் இணைத்துக்கொண்டார்
மெல்லின ஒலிகள் ஒலிப்பண்பால் வல்லின ஒலிகளினின்றும்
வேறுபட்டவை. எனினும் வல்லின ஒலியின் மூக்குச்சாயல்
(அனுஸ்வாரம்) ஒலியே மெல்லின ஒலி எனும் கொள்கையுடைய
வடவெழுத்தாளர் மெல்லின ஒலிகளை அவ்வவற்றின் பிறப்பிடத்தை
ஒத்த வல்லின வர்க்கத்தின்பின் இணைத்துள்ளனர். அவர்கள் வல்லின,
மெல்லினங்களை அடைப்பு முயற்சியில் உண்டாகும் ஒலிகள் (ஸ்பர்ஸ,
stஷீஜீ sஷீuஸீபீs) என்றே வகைப்படுத்துகின்றனர். அவ்வடிப்படையிலேயே
தொல்காப்பியரும் வல்லின, மெல்லினங்களை மெய்யலி வரிசையில்
நிரல் நிரையாக வைத்துள்ளார். எனினும் இவ்விரு குழுக்களின்
விகற்பத்தை நன்குணர்ந்திருந்த தொல்காப்பியர் தனியரு விதிப்பா
செய்துள்ளது அவரது எழுத்தியல் கொள்கை மேலதற்கு இடங்
கொடாமையாலேயே. எனவே பிறிதோரிடத்து வல்லின, மெல்லின
ஒலிகள் இடத்தால் ஒன்றியவை, முயற்சியால் வேறானவை என்பதனை
மெல்லெழுத்தாறும் பிறப்பி னாக்கஞ்
சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும் - தொல். 100
புனல் க. முருகையன்
இவ்விரு குழுக்களின்
விகற்பத்தை
நன்குணர்ந்திருந்த
தொல்காப்பியர்
தனியரு விதிப்பா
செய்துள்ளது அவரது
எழுத்தியல் கொள்கை
மேலதற்கு இடங்
கொடாமையாலேயேபுதிய பனுவல்  20
என மெல்லின ஒலிகளின் முயற்சியைச் சரியாக உணர்த்த விரும்பிய
ஆசிரியர், அதனைப் பகர, மகரப் பிறப்பினைக் கூறும் நூற்பாவிற்குப்பின்
வைக்காததும் அவரது இருநிலைக் குழப்பத்தையே காட்டுகின்றது.
அதாவது இந்த நிலை தமிழ்மொழியில் எழுத்தியல் வரிவடிவத்தின்
அயல் தன்மையால் விளைவதேயாகும்.
மேலும் பிறப்பியலில் தகர, நகரப் பிறப்புப் பற்றிய நூற்பாவிற்
குப்பின் றகர, னகரப் பிறப்புப் பற்றிய நூற்பாவை வைத்துள்ளதும்
ஒப்பா நிலையே. ஈண்டு முறைப்படி நோக்கின், றகர, னகரம் பற்றிய
நூற்பாவை தகர, நகரம் பற்றிய நூற்பாவிற்குமுன் வைக்கவில்லை.
எனினும் அதனைப் பகர, மகரம் பற்றிய விதிக்குப்பின்  வைத்துள்ளது
ஓரளவிற்கு அவரது வைப்பு முறையின் நுட்ப உறுத்தலேயாகும்.
வல்லின, மெல்லின ஒலிகள் பொதுப்பண்பில் (அடைப்பு) ஒன்றித்தும்
சிறப்புப் பண்பால் (மூக்கிசை) விகற்பித்தும் வரும் என்று கூறியிருப்பது
அவரது ஆய்வியல் நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இது
பொது, சிறப்பு ஆகிய பண்புகளைத் தொகுத்து வகுக்கும் விகற்ப
உத்தியாகும். ஆனால் வல்லின, மெல்லினங்களை உடன்கூட்டியது
அயல் தன்மையாலன்றோ? என்று ஐயுற வாய்ப்புள்ளது.
இடையினம் என்ற கலைச்சொல், வல்லின ஒலிகட்கும் மெல்லின
ஒலிகட்கும் இடைப்பட நின்ற ஒலிக்கூட்டத்தைக் குறிக்கும் சொல்
என்பது சிலரது கருத்து. இது அடிக்கோளற்ற சொல்லாக்க நியதியால்
(யீஷீறீளீ மீ tஹ்னீ ஷீறீஷீரீஹ்) தரப்பட்ட விளக்கம். பேச்சொலிகள் அசைகொள்ளும்
தன்மையினைப் பொறுத்து மூன்று வகையாகப் பகுக்கப்படுகின்றன.
1. அசை முகடாகும் தன்மைபெறும் உயிரொலிகள்.
2. அசையிலியாகவே வரக்கூடிய (பெரும்பாலான மொழிகளில்)
அசையின் முன்னி  (ளி ஸீsமீ t), முடிப்பிகளாகச்  (சிஷீபீணீ) செயற்படும்
வல்லின, மெல்லின ஒலிகள்.
3. அசையாகவும் அசையிலியாகவும் அசையில் தாம்வரும் இடம்
சூழலுக்கு ஏற்பச் செயற்படக்கூடிய உயிர்ப்போலிகள் (கிஜீஜீக்ஷீஷீஜ்வீனீ ணீஸீt)
இடையின ஒலிகளாகும்.
இவை உயிரொலிகளைப் போன்றே பிறப்பாக்கம் உடையவை,
உயிரொலிகளைவிடச் சற்று உராய்வுடன் ஒலிக்கப் பெறும் இவை
பிறப்பாக்கத்தாலும் அசைப்பண்பாலும் அதாவது, அசைநிலை பெறும்
உயிர் அசைநிலை பெறாத அடைப்பொலி (வல்லின, மெல்லின
ஒலிகள்) ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நிலையில் மொழியில்
எழுத்தியல் கூறுபெறுவதால் இடையினம் என்பதே பொருந்தும்.
இவ்விளக்கமே சிறப்புடைத்து; தொல்காப்பியரின் எழுத்தியல்
நுட்பத்தைக் காட்டவல்லது. மாறாக வல்லின, மெல்லினங்களுக்கு
இடைப்பட்ட ஒலிப்பண்பென்பது அன்னாரது விருப்பத்திற்கு
புனல் க. முருகையன்
இடையினம் என்ற
கலைச்சொல், வல்லின
ஒலிகட்கும் மெல்லின
ஒலிகட்கும் இடைப்பட
நின்ற ஒலிக்கூட்டத்தைக்
குறிக்கும் சொல் என்பது
சிலரது கருத்து. இது
அடிக்கோளற்ற
சொல்லாக்க நியதியால்
தரப்பட்ட விளக்கம்புதிய பனுவல்  21
இழுக்காகும். வடமொழியில் இது அறிவியல் நோக்கில் விளக்கப்
படுகிறது. இப்பொருள்படவே, ய, ர, ல, வ ஆகியவை அந்தக்ஸ்தா
(இடைநிலை) என்றழைக்கப் பெறுகின்றன. மொழியியலிலும்
அப்ராக்ஸிமன்ட் (கிஜீஜீக்ஷீஷீஜ்வீனீ ணீஸீt உயிருடன் ஒத்த பிறப்புடையவை) என்று
கூறப்படுகின்றன.
இடையின ஒலிகள் ய, ர, ல, வ, ழ, ள என்று நிரல்படுத்தப்
பட்டுள்ளன. இவற்றுள் யகர, வகரங்கள் பெருமளவில் முறையே இகர,
உகரங்களோடொத்த அரையுயிர்களாகும். அதாவது, உயிரொலி
களிலிருந்து சிறிது உராய்வுகூடி ஒலிப்பவை அரையுயிர்கள் எனப்படும்.
இவை தனித்து வரும்போது அசையிலியாகி மெய் நிகர்த்தும், உயிரோடு
ஒன்றியவழி ஒரோவழி அதனோடொத்து முகடாகும் தன்மையும்
உடையவை. இந்நிலையிலேயே அஇ, அஉ என்பன ஈருயிர்கள்
(ஞி வீஜீலீ tலீ ஷீஸீரீs) என்று கருதப்படும். அஇ, அஉ என்பன அய், அவ் என்ற
உயிரும் மெய்யுமாகிய தொடருடன் வேற்றுநிலை வழக்கில் தனி
வரிவடிவம் அதாவது, அஇ, அஉ அல்லது அய் அவ் என்பன
வற்றினின்றும் வேறுபட்ட ஒன்று என்பது நிறுவப்படும். உயிரும்
உயிருமாகி உயிரும் மெய்யுமானவற்றுடன் வேறாகிப் பொருள்
பயத்தற்கு இன்றியமையாதிருப்பின் மட்டுமே ஈருயிர் தனி வடிவம்
தேவை. இல்லெனின் உயிரும் மெய்யுமாகக் கொள்வதே எழுத்தியல்
கொள்கையும் சிக்கனப் போக்குமாகும். அ, ய், வ் என்பன மொழியில்
ஏற்கெனவே உள்ளதால், புதிதாக ஓர் உயிரை வலிந்து கொள்ள
வேண்டியதில்லை. மேலும் தமிழைப் பொறுத்தவரை 18+18=36 வரி
வடிவங்களை விடுத்து அச்சுப் பளுவையும் சிறார்களின் மனச்
சுமையையும் குறைக்கலாமே. இருந்தும் ஏதோ காரணம் பற்றி ஐ, ஒள
ஆகியவற்றை ஏதோ இறைவன் படைப்புப் போல் எண்ணி
முரண்படுவது ஆய்வறிஞர்கட்கு அழகல்ல. யகர, வகரங்கள் அவற்றின்
எழுத்தியற் செயற்பாட்டால் ஒரு தொழிலின என்றாலும் அவற்றின்
பிறப்பாக்கத்தால் ரகர, லகரங்களை இடையிட்டு அமைத்துள்ளார்.
ஆனால் ழகர, ளகரங்களை இவ்வடிப்படையில் லகரத்தை அடுத்தும்
வகரத்திற்கு முன்னும் வைக்காமல், வகரத்தை அடுத்து வைத்துள்ளது
எல்லா விதத்திலும் அவரது நுண்மான் நுழைபுலக் குறையே.
ஏனெனில் அவர் ஏற்றுக்கொண்ட வரிவடிவ நெடுங்கணக்கில் ழகர,
ளகரங்கள் இல்லை. எனவே றகர, னகரங்களைப் பின்னர் வைத்தது
போல் இவற்றையும் எந்த நியதியும் இல்லாமல் இடையினத்தின்
இறுதியில் இணைந்துள்ளார். இடையினம் என்ற ஒரு தகுதி மட்டுமே
இவற்றின் வைப்பு முறையை நியாயப்படுத்தக்கூடும். தொல்காப்பியர்,
அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகரம் பிறக்கும் - தொல். 99
புனல் க. முருகையன்
மிழைப் பொறுத்தவரை
18+18=36 வரி
வடிவங்களை விடுத்து
அச்சுப் பளுவையும்
சிறார்களின் மனச்
சுமையையும்
குறைக்கலாமே. இருந்தும்
ஏதோ காரணம் பற்றி
ஐ, ஒள ஆகியவற்றை
ஏதோ இறைவன்
படைப்புப்
போல் எண்ணி
முரண்படுவது
ஆய்வறிஞர்கட்கு
அழகல்லபுதிய பனுவல்  22
என்று நூற்பா யாத்துள்ளார். ‘அண்ணம் சேர்ந்த’ என்பதால்
யகரத்தின் இகரச் சாயலும், கண்ணுற்றடைய என்பதால் அதன்
உராய்வுப் பண்பும் காட்டப்படுகின்றன. உராய்வுப் பண்பே யகரத்தை
இகரத்தினின்றும் வேறாக்குகின்றது. குரல் வளை மடல்களின்
அதிர்வால்  - மிடற்றொலியால்  - இசையால் (ஸ்வரம்) இடைநா
இடையண்ணத்தை நெருங்கி அமையும் இடத்தில் உராய்வுடன் கூடிய
ஒலியாய்ப் பிறக்கின்றது.
அகர உகரம் ஒளகாரமாகும் - தொல். 55
என்ற நூற்பாவின்படி அகரமும் உகரமும் இணைந்து ஒளகாரமெனும்
ஈருயிராகின்றது. இந்த இணையில் இரண்டாவதாக உள்ள ஒலி ஈரிதழ்
வகரமாக (ஷ் ) ஆக ஒலிக்கப்படுவதில்லை. மாறாக, பல்லிதழ் ஒலியாகவே
(ஸ்) பிறக்கின்றது.  ‘‘பல்லிதழ் இயைய வகரம் பிறக்கும்’’ என்பது
தொல்காப்பியத்தின் 98ஆம் நூற்பா.
ஒளவையார் என்பதில் வகரம் பல்லிதழ் ஒலியாகவும் தஞ்சாவூர்
என்பதில் வகரம் ஈரிதழ் ஒலியாகவும் வருவதைக் காணலாம்.
தொல்காப்பிய நூற்பா 54, 98 ஆகியவற்றின்படி பல்லிதழ் வகரமும்
காட்டப்படுகின்றன. இவை முறையே ஆங்கில மொழியில் உள்ள ஷ்
ஸ் என்ற ஒலிகளை ஒக்கும். ஆனால் ஒளகாரத்தில் ஈரிதழ் ஒலியாக
ஒலிக்கப்பட வேண்டிய ஒலி யாண்டும் பல்லிதழ் வகரமாகவே
ஒலிக்கப்படுகின்றது; முந்தும் இவ்வாறே இருந்திருக்க வேண்டும்
என்பது வரலாற்றடிப்படைகொண்டு நிறுவப்பட்டதால், ஒளவை
என்பதன் தெலுங்குமொழி வடிவமே அவ்வா. இதுவே தமிழ்
மரபோடொத்த ஒலிப்பு முறையாகும். ஒளவை, கௌவை, வெளவால்
போன்றவற்றில் உள்ள வகரம் பல்லிதழ் வகரமாகவே ஒலிக்கப்
படுவதை ஒலித்தறியலாம். உடம்படு மெய்யாக வரும் வகரமே ஈரிதழ்
வகரமாக ஒலிக்கப்படும். எடுத்துக்காட்டாக தஞ்சாவூர், கருவூர் என்ற
சொற்களை ஒலித்து வகரத்தின் பிறப்பாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
கரூர் என்பது வடமொழி தீர்க்கச் சந்தி போன்றது.
2
ரகர ஒலி, ஒலியியல் புலத்தில் கடின உழைப்பைப் பெற்றே பிறக்கும்.
அதாவது, கூர்நா ஒலி விரிநா அமைப்பாகத் தடித்திருந்த முன்விளிம்பு
கூர்த்தெழுவது பரிணாம வளர்ச்சி. எனவே தமிழ் மக்கள் ரகரத்தை
முதலாகக் கொண்ட அயற்சொற்களை, ஏற்ற தொடக்க உயிர் ஒலிக்குப்
பின் ஒலித்து எளிமை பெற்றனர். அதனால் பழமை விரும்பிகளாக
அ, இ, உ ஆகிய எழுத்துகளை முன்னிட்டு எழுதுவது தேவையற்ற
தாகும். அறிஞரும்கூட சாதாரண நிலையில் ‘இராமா’ என்று
அழைப்பதில்லை. அப்படியாயின் அது வலிந்து கொள்ளலேயாகும்.
ரகரம் ஓர் ஒலியாக இருந்திருக்க வேண்டும். இது தனித்தியங்கும்
ஆற்றலுடைய உயிர் போன்றும் உயிருடன் கூடி ஒலிக்கும் மெய்
புனல் க. முருகையன்
ஆனால் ஒளகாரத்தில்
ஈரிதழ் ஒலியாக
ஒலிக்கப்பட வேண்டிய
ஒலி யாண்டும் பல்லிதழ்
வகரமாகவே
ஒலிக்கப்படுகின்றது;
முந்தும் இவ்வாறே
இருந்திருக்க வேண்டும்புதிய பனுவல்  23
போன்றும் இயங்கும் தன்மையுடையது. எனவேதான் வடமொழியில்
இது உயிர் வரிசையிலும் மெய்க் குழுமத்திலும் இடம் பெற்றுள்ளது.
வடமொழியில் இதன் ஒலிப்பருமை பற்றி இதனை விளக்குமிடத்து,
இது பிறாண்டும்போது ஏற்படும் ஒலி போன்றோ அல்லது துணியைக்
கிழிக்கும்போது உண்டாகும் ஒலி போன்றோ இருக்கும் என்று
குறிப்பிடுகின்றனர். உயிர்போன்றே இதுவும் இரட்டித்து வராது.
தமிழில் இது மொழிமுதலில் வராது. மொழி முதலில் வராத ஒலிகள்
காலத்தால் பிற்பட்டுத் தோன்றியவையாகும். காரணம் ஒலிப்
பருமையே ஆகும். முழுநிலை ஒலியன்களாகத் தமிழில் ரகர முதல்
மொழிச் சொற்கள் அ, இ, உ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை
முன்கொண்டே தொடங்கும்.
தோற்றக்காலத்தில் ஒலிப்பெளிமை பற்றி இணைத்தொலிக்கப்பட்ட
இம்முறை வரிவடிவில் இன்றும் நிலைத்துள்ளது. மொழிமுதலில்
ரகரத்தை முந்துறும் உயிர்கள் இன்று ஒலிப்பிலிகளாகவே உள்ளன.
இவ்வரிவடிவ எழுத்தமைதி புலமைக்கும், மரபுக்குமே எடுத்துக்
காட்டாக இன்றுள்ளது.
தொல்காப்பியம் கூறும் சார்பெழுத்துக்களில் ஆய்தம் ஒன்றே
தனிவடிவுடையது. இந்த ஒலி வல்லின நெகிழ்வால் வந்துற்ற ஒரு
குழும ஒலியன்  (கிக்ஷீநீலீ வீஜீலீ ஷீஸீமீ ஸீமீ ). அதாவது, இவ்வொலி தன்னை
அடுத்துவரும் வல்லின ஒலியின் பிறப்பிடத்தை இடமாகக் கொண்டு
பிறக்கும் நெகிழ்வு ஒலி. உரசொலி  (யீக்ஷீவீநீணீtவீஸ்மீ ) அதாவது அறுவகைப்
பிறப்பிடத்தையும் ஒரே முயற்சி நிலைமையும் கொண்ட ஒலியன்.
குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
யுயிரொடு புணர்ந்தவல் லாறன்மிசைத்தே - தொல். 38
 ஆறு வல்லின ஒலிகளுக்கும் முன் அவற்றொடு ஒத்த மாற்று
உரசொலியாக இருந்த ஆய்த ஒலியன், இன்று உரசொலியாக
ஒலிக்கப்படுகின்றது. அதாவது வடமொழியில் உள்ள விசர்க்கம்,
அனுசுவாரம் போன்று தத்தம்மோடொத்த முயற்சியோடு அவை
ஏற்றமையும் ஒலிகளின் இடத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு ஒலிப்பது
போன்றே ஆய்த ஒலியனும் இடத்தால் வேறுபட்ட ஆறு மாற்று
ஒலிகளைக் கொண்டிருக்க வேண்டும். முட்டீது: முஃறீது, கற்றீது:
கஃறீது, பத்து: பஃது முதலியவை போலாகும். ஈண்டு ட், ற், த் என்பன
ஒத்த உரசொலிகளாக இருந்து இன்று பின்னண்ண உரசொலியாக
ஆகியிருக்க வேண்டும்.
இதுகாறும் ஆராய்ந்தறிந்த உண்மையின் அடிப்படையில்
தொல்காப்பியத்தில் காட்டப்பட்டுள்ள நெடுங்கணக்கு எழுத்துக்களும்
வைப்புமுறையும் 300 பொது ஆண்டுகளுக்கு முன் அசோகன்
காலத்திற்கும் முன் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த அராமிக்
புனல் க. முருகையன்
தமிழில் இது
மொழிமுதலில் வராது.
மொழி முதலில் வராத
ஒலிகள் காலத்தால்
பிற்பட்டுத்
தோன்றியவையாகும்.
காரணம் ஒலிப்
பருமையே ஆகும்புதிய பனுவல்  24
வரிவடிவத்திலிருந்து தோன்றிய எழுத்து முறையைப் பின்பற்றியது
என்பதற்கான ஆதாரங்கள் விவாதிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.
வடபுலத்தில் வழங் கப்பட்ட இம் முறை அசோ கன் பிரா மீ
எனப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் ஒலிகளுக்கு ஏற்ற
மாற்றங்களுடன் அமைக்கப்பட்ட நெடுங்கணக்கெழுத்து முறையே
தமிழ்ப் பிராமீ எனும் வரிவடிவ முறையாகும். வரிவடிவ முறை அயல்
தன்மைத்தாதலால் எழுத்தியல் முறைக்குச் சற்று விலகியும் பிழைத்தும்
அமைந்துள்ளது. தமிழ்ப் பிராமீயில் அசோகன் பிராமீயில் உள்ள
சில வடிவங்கள் விடுத்தும் சில புகுத்தியும் இணைத்துக்கொள்ளப்பட்ட
போதும், தமிழ் மொழியின் ஒட்பத்திற்கேற்ப எழுத்தியல்பும்
வைப்புமுறையும் சீர் செய்யப்படவில்லை.
இங்குக் காண்பவை அனைத்தும் எனது ஆய்வின் முடிவுகள்;
மொழியியல் நுண்நோக்கி, தொலைநோக்கிகளின் துணைகொண்டு
பெற்ற அளவையியலின் திட்பமாகும். கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு. எனவே இதுவே முடிந்த முடிவன்று;
அறிதொறும் அறியாமையே விரியும் என்பதும் புறந்தள்ளக் காரணம்
காட்டலும் அறிவுடைச் சான்றோர்தம் பொறுப்பு. ஆய்வின் விளக்கம்
முடிவன்று தொடக்கமே ஆகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423)
பிற்சேர்க்கை
தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் உயிர் 10, மெய் 18, ஆய்தம்
ஒன்று ஆகியவை மட்டுமே.
வைப்புமுறை
உயிர்: அ, ஆ, எ, ஏ, இ, ஈ, உ, ஊ, ஒ, ஓ.
ஆய்தம்: ஃ
மெய்: வல்லினம் - க், ச், ட், ற், த், ப்.
மெல்லினம் - ங், ஞ், ண், ன், ந், ம்.
இடையினம் - ய், ர், ல், ழ், ள், வ்.
புனல் க. முருகையன்
தமிழ்ப் பிராமீயில்
அசோகன் பிராமீயில்
உள்ள சில வடிவங்கள்
விடுத்தும் சில புகுத்தியும்
இணைத்துக்கொள்ளப்பட்ட
போதும், தமிழ் மொழியின்
ஒட்பத்திற்கேற்ப
எழுத்தியல்பும்
வைப்புமுறையும் சீர்
செய்யப்படவில்லைபுதிய பனுவல்  25
குறிப்புகள்
1. பிரான்சிஸ் குரேஸ் என்ற பிரஞ்சு நாட்டுப் பேரறிஞர் சங்க நூல்கள், பக்தி
இலக்கியங்களுக்குப் பிற்பட்டவை; செயற்கையாகப் பழைமையான நடையில்
எழுதப்பட்டவை; அவற்றில் காணப்படும் அனைத்துப் பண்பாட்டுக்
கூறுகளும் வடநாட்டுடன் தொடர்புடையவை என்று நாக்கூசாமல் புலமை
நேர்மையின்றிச் சொல்கின்றார். (ஞி மீ மீ ஜீ ஸிவீஸ்மீ க்ஷீs, ஷிமீ றீமீ நீtமீ பீ ஷ் க்ஷீவீtவீஸீரீs ஷீஸீ ஜிணீனீ வீறீ லிவீtமீ க்ஷீணீtuக்ஷீமீ ,
வீஸீstவீtu tமீ திக்ஷீணீஸீஃஷீவீs பீமீ ஜீஷீஸீபீவீநீலீ மீ க்ஷீஹ், 20 0 9 ) இந்தப் புத்தகத்தைப் பற்றி ‘இந்து’
நாளிதழில் விமரிசனம் எழுதியவர் இப்பிழைகளைப் பற்றி ஒரு வார்த்தைகூட
எழுதவில்லை. மாறாக நூலாசிரியரையும் அவர் சொன்ன பக்திப்
பரவசத்தையும் வானளாவப் புகழ்ந்துள்ளனர். இது தான் தமிழினம்.
2. மொராயிக் என்பது பேச்சின் அசையைக் குறிப்பதாகும். பேச்சின் அசை
என்பது தாய்மொழியாளனின் பேச்சில் ஒரே உறுப்பாக வெளிப்படும்
ஒலித்தொகை ஆகும். அதாவது அல், கல் என்பன பேச்சில் தனித்தனி ஒலித்
தொகையாக அமையும். இவை மாத்திரை அளவால் காலக்கோட்பாட்டினைக்
கொண்டவை ஆகும். எனவேதான் மாத்திரை அடிப்படையில் விளக்கப்பட
வேண்டியவை என்னும் கருத்தில் ‘மொராயிக்’ என்று கொள்ளப்படுகின்றது.
மொராயிக் என்பது பேச்சின் அலகு (uஸீவீt) ஆகும். மொழியின் அலகு ஒலியன்
(ஜீலீ ஷீஸீமீ னீ ); பேச்சின் அலகு அசை (sஹ்றீறீணீதீறீமீ ).
3. எடுத்துக்காட்டாக ஒன்று சொல்ல ஆசைப்படுகின்றேன். இந்த நன்செய் ஊரின்
பெயர் கரூரா? கருவூரா? இரண்டாவது சொல் தமிழ் இலக்கணப் புணர்ச்சி
விதியின்படி கரு+ஊர் என்ற வேர், விகுதிகளின் புணர்ச்சியில் வகர உடம்படு
மெய் பெற்றுக் கருவூர் என்று ஒரு சொல்லானது. கருவூரின் மருவாக வந்து
இன்று புழக்கத்தில் உள்ள சொல்லே கரூர். ஆனால் இதனையே காட்சியாகக்
கொண்டு ஒருவர் கரூர் என்ற சொல் வடமொழிப் புணர்ச்சி விதியின் விளைவு.
வடமொழியில் நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் ஒரே இன
உயிர்கள் வரின் அம்மொழிப் புணர்ச்சி விதிப்படி, அவ்விரு உயிர்களும்
கெட்டு அவற்றின் நெடில் தோன்றும். இது தீர்க்கச் சந்தி என்று காரணம்
காட்டித் தலபுராணம் எழுதினால் அறிவுடைப் பெரியோர் சிரிக்கமாட்டாரா?
இதை அடிக்கோளற்ற பாமரச் சொற்பிறப் பாக்கம் (திஷீறீளீ மீ tஹ்னீ ஷீறீஷீரீஹ்)என்று
புறக்கணிப்பார்கள்.
4 . ளி ஸீமீ ஷ் ஷீஸீபீமீ க்ஷீs ஷ் லீ ஹ் tலீ மீ றீவீst sலீ ஷீuறீபீ மீ ஸீபீ வீஸீ ஷ் லீ வீநீலீ றீஷீரீவீநீணீறீறீஹ் sலீ ஷீuறீபீ தீமீ வீஸீ தீமீ tஷ் மீ மீ ஸீ
பீமீ ஸீபீணீறீs ணீஸீபீ க்ஷீமீ tக்ஷீஷீயீறீமீ ஜ் (பீஷீனீ ணீறீ) நீஷீஸீsஷீஸீணீஸீts sவீஸீநீமீ க்ஷீ@ ணீஸீபீ ஸீ\ ணீக்ஷீமீ ஜீறீஷீsவீஸ்மீ ணீஸீபீ ஸீணீsணீறீ
க்ஷீமீ sஜீமீ நீtவீஸ்றீஹ், ணீக்ஷீtவீநீuறீணீtமீ பீ வீஸீ tலீ மீ ஜீறீணீநீமீ ணீறீஸ்மீ ஷீறீணீக்ஷீ க்ஷீமீ ரீவீஷீஸீ. றிஷீssவீதீ றீஹ் tலீ மீ ணீutலீ ஷீக்ஷீ ஷீயீ
ஜிலீ ஷீறீளீ ணீஜீஜீவீஹ்ணீனீ யீஷீறீறீஷீஷ் வீஸீரீ tலீ மீ tக்ஷீணீபீவீtவீஷீஸீ tஷீஷீளீ க்ஷீமீ றீமீ ஸ்ணீஸீt றீமீ ttமீ க்ஷீs யீக்ஷீஷீனீ ஷிணீஸீsளீ க்ஷீவீt றீவீst,
நீஷீஸீsவீபீமீ க்ஷீவீஸீரீ tலீ மீ னீ tஷீ தீமீ நீஷீனீ னீ ஷீஸீ ஷ் வீtலீ ஷிணீஸீsளீ க்ஷீவீt ணீஸீபீ ணீபீபீமீ பீ tலீ மீ மீ ஜ்நீறீusவீஸ்மீ ஜிணீனீ வீறீ
றீமீ ttமீ க்ஷீs ணீt tலீ மீ tணீவீறீ மீ ஸீபீ. ஜிலீ வீs வீs ஷ் லீ ஹ் மீ ஸ்மீ ஸீ ஸீஷீஷ் tலீ மீ ஜிணீனீ வீறீ றீவீst ஷீயீ றீமீ ttமீ க்ஷீs மீ ஸீபீ றீ@ , க்ஷ் \,
க்ஷீ@ , ஸீ\. லிவீரீவீநீணீறீறீஹ் றீ@ sலீ ஷீuறீபீ ஜீக்ஷீமீ நீமீ பீமீ றீ, க்ஷ் \ sலீ ஷீuறீபீ suநீநீமீ மீ பீ ஹ், க்ஷீ@ -ஸீ\ sலீ ஷீuறீபீ தீமீ ஜீறீணீநீமீ பீ
ணீயீtமீ க்ஷீ t@ -ஸீ@ . (ஞி க்ஷீ. ஜி. ஙி. க்ஷிமீ ஸீuரீஷீஜீணீறீணீ றிணீஸீவீநீளீ மீ க்ஷீ, ஸிமீ tவீக்ஷீமீ பீ றிக்ஷீஷீயீமீ ssஷீக்ஷீ, சிணீறீவீநீut ஹிஸீவீஸ்மீ க்ஷீsவீtஹ்,
‘றிலீ வீறீஷீறீஷீரீஹ் ணீஸீபீ றிலீ ஷீஸீமீ tவீநீs வீஸீ றிக்ஷீணீtலீ வீsணீளீ லீ ஹ்ணீs, ஜிலீ ஷீறீளீ ணீஜீஜீவீஹ்ணீனீ ணீஸீபீ லிவீறீணீtவீறீணீளீ ணீனீ ’,
தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடும் பிற திராவிட வடமொழி
இலக்கணக் கோட்பாடுகளும் (எழுத்து, சொல்) கருத்தரங்க ஆய்வுரைகள்,
ஒருங்கிணைப்பாளர் பெ. மாதையன், ஜீ. 139.)
புனல் க. முருகையன்புதிய பனுவல்  26
துணைநூற்பட்டியல்
இராகவையங்கார், ரா. 1952. தமிழ்மொழிவரலாறு, அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
திருவள்ளுவர் (பதி) 1970. திருக்குறள், தென்னிந்திய சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடும் பிற திராவிட வடமொழி
இலக்கணக் கோட்பாடுகளும் (எழுத்து, சொல்) கருத்தரங்க
ஆய்வுரைகள். 2011.
தொல்காப்பியர், தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை
(பதி.) 1937. கணேசய்யர் பதிப்பு, திருமகள் அழுத்தகம், சுண்ணாகம்,
யாழ்ப்பாணம்.
“சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பதி.) 1937. கணேசய்யர் பதிப்பு,
திருமகள் அழுத்தகம், சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
“பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (பதி.) 1937. கணேசய்யர் பதிப்பு,
திருமகள் அழுத்தகம், சுண்ணாகம், யாழ்ப்பாணம்..
புத்தமித்திரனார், வீரசோழியம் (பதி.) 1977. தமிழ்ப் பதிப்பகம், அடையாறு,
சென்னை.
முருகையன், 2010. பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு, காந்தளகம், சென்னை.